Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பை 30-க்குள் வெளியிடாவிட்டால்.. அமைச்சருக்கு போராட்டக்குழு நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சையை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. அமைச்சர் கோவி செழியனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தங்களுடன் களம் இறங்கி போராட வேண்டும் என்று போராட்டக்குழு நெருக்கடி கொடுத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, கும்பகோணத்தில் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்ட கோரிக்கை போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

The New Kumbakonam district should be published by the 30th Says The protest committee

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்து 1500 நாட்கள் கடந்த பிறகும் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டிய போராட்டக்குழு போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து நேற்று கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம், மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) அலுவலகம் மற்றும் திருவிடைமருதூரில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அலுவலகம், திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகம் ஆகிய இடங்களில் கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழுவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை அனுமதியின்றி நடந்த இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் உழவர் சந்தை பகுதியில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் அமமுக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஒரே நாளில் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம், மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) அலுவலகம் மற்றும் திருவிடைமருதூரில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அலுவலகம், திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகம் என மூன்று வெவ்வேறு இடங்களில் முற்றுகை போராட்டங்கள் காரணமாக கும்பகோணத்தில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க. ஸ்டாலின் பேசுகையில் , "பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வரும் முன்பு வாக்குறுதி அளித்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை கும்பகோணம் மாவட்டம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை. இப்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் அமைச்சர் கோவி.செழியன், எம்எல்ஏ ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பின்னர் எங்களோடு இணைந்து அவர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்" இவ்வாறு பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+