ஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.! பேராசிரியர் ஜெயராமன்
தஞ்சை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என சட்டம் இயற்றும் வரை போராட்டங்கள் தொடரும் என பேராசிரியர் ஜெயராமன் அறிவித்துள்ளார்.
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைகாரன்இருப்பில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் தொடர் போராட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாகவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தெரிவித்துள்ளார் என பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார்.
இதற்கு முன்னால் இப்படி ஒரு திட்டமே கிடையாது என்று சொல்லியிருந்தார் அமைச்சர் சி.வி சண்முகம். தற்போது திட்டம் இருக்கிறது, ஆனால், தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என பேசுகிறார். ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு அனுமதி கொடுக்காமல் எவ்வாறு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதல்கட்டப் பணிகள் நடக்கின்றன என பேராசிரியர் ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றும் வரை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் ஓயவே ஓயாது என உறுதிபட கூறினார்.
மேலும் பேசிய அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என ஒரு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிடலாமே. அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய அரசாணையே செல்லும் என அறிவிக்க வேண்டும். ஜெயலலிதா வெளியிட்ட அரசாணை மீத்தேன், நிலக்கரி திட்டங்களை ரத்து செய்தது. அது ஹைட்ரோகார்பனுக்கும் பொருந்தும் என தற்போது அறிவிக்கலாம்
ஒரு சிறப்பு சட்டம் இயற்றி காவிரி படுகையையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கைகளை செய்ய தமிழக அரசு தயங்குவதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் வாய்மொழியாக சொன்னதையே, ஒரு அதிகாரப்பூர்வ கடிதமாக மத்திய அரசுக்கு அனுப்பலாமே. எதற்காக தமிழக அரசு தயங்கி நிற்கிறது என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
வாய்மொழியாக கூறுவதை நிறுத்தி விட்டு தமிழக அரசு செயலில் காட்ட வேண்டும். மக்களை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க போவதில்லை என்ற முடிவெடுத்து இனியாவது தமிழக அரசு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications