கல்யாணத்தில் கறி விருந்து.. விழாவை சிறப்பித்த மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!
தஞ்சாவூர்: கல்யாணத்திற்கு பின் போடப்பட்ட கறி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு அடுத்தடுத்து ஏற்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 35873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 274629 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 448 பேர் பலியாகி உள்ளனர்.

தினசரி தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.
இந்த சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கொரோனாவிற்கு ஆளாகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ராஜா என்பவருக்கு கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி திருமண கறி விருந்து நடைபெற்றது. கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் புது மாப்பிள்ளை ராஜா உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டருக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications