தேனி கம்பம் மெட்டு சாலையில் நின்றிருந்த காரில் 3 சடலங்கள்.. வாயில் நுரை தள்ளிய நிலையில் இறப்பு
தேனி: தேனி கம்பம் மெட்டு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இன்று காலை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் என்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மூவரும் எப்படி இறந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலையில் ஓடை பகுதியில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்வையிட்ட போது அந்த காரில் 3 பேர் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனை செய்ததில் அங்கு 3 பேர் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனே கார் கதவுகளை உடைத்து அந்த 3 சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அந்த கார் கேரள பதிவு பெண் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் கேரளாவில் இருந்து எங்கு செல்வதற்காக வந்தனர். அல்லது எங்கிருந்து வந்தனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் வாயிலும் நுரை தள்ளியுள்ளதால் ஏதாவது மருந்து குடித்துவிட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
காரின் அருகே மருந்து பாட்டில் இருந்ததை தடயவியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். காரின் முன் பகுதியிலேயே மூவரும் அமர்ந்திருந்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் முழு விவரம் தெரியவரும். மேலும் அவர்கள் யார் என்ற விவரங்கள் தெரிந்தால்தான் அவர்கள் எதற்காக இறந்தனர் என்பது குறித்தும் தெரியும்.












Click it and Unblock the Notifications