அது நடக்காமலேயே போயிடுச்சு.. பாரதிராஜாவிற்கு தேனியில் அஞ்சலி செலுத்திய கருணாஸ் உருக்கமான பேட்டி
தேனி: இயக்குநர் பாரதிராஜாவின் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் ஆனால் அது நடைபெறவில்லை; அவரின் இழப்பு தமிழ் உலகத்திற்கு மட்டுமில்லாமல் தமிழ் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் பேட்டி அளித்துள்ளார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது என்று தனது இரங்கலை பகிர்ந்து கொண்டார்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முன்னாள் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் மாற்றுக் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

முன்னதாக பாரதிராஜான உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் வடிவேலு மற்றும் வைரமுத்து ஆகியோர் வருகை தந்தனர். பாரதிராஜாவின் உடலைப் பார்த்து நடிகர் வடிவேலு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய செல்லூர் ராஜு அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்து கொண்டார்
மேலும் பாரதிராஜா உடலுக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அஞ்சலி செலுத்தினார் . அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்த கருணாஸ் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், " இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உயிரிழப்பு ஒட்டுமொத்த சினிமா துறையின் மிகப்பெரிய இழப்பு. அவரது படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட ஆசைப்படும் பல கலைஞர்களின் நானும் ஒருவன் ஆனால் அது நடைபெறவில்லை. தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்கும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு அளித்து தமிழர் நலனுக்காக முன்னின்றவர்.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கு எனது சார்பாகவும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் " இவ்வாறு தெரிவித்தார்.
-
"பாரதிராஜா முகத்தை பார்த்ததும் கதறி அழுத வடிவேலு"... நடையில் தெரிந்த மாற்றம்! தேனியில் கண்கலங்க வைத்த காட்சி! -
மனோஜின் காலை நள்ளிரவில் அமுக்கிய டைரக்டர் பாரதிராஜா.. "என்னப்பா செய்றீங்க?" உருகிய தந்தை பாசம் -
"இனி யாரோடு பாடுவேன்? பாரதிராஜாவை சிரிக்க வைத்த வீடியோவை பகிர்ந்து உருகிய வைரமுத்து!" ரசிகர்கள் ஆறுதல் -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம் -
Ilaiyaraaja: நண்பன் பாரதிராஜாவின் அசைவற்ற உடல்.. வித்தியாசமாக பேசிய இளையராஜா -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன்













Click it and Unblock the Notifications