தேனியில் இருந்து மதுரைக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ்.. வைகை ஆற்று பாலத்தில் சோகம்
தேனி : தேனியில் இருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர். வைகை ஆற்று பாலத்தின் தடுப்புகளை மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
தேனியை சேர்ந்த பெண் மேல் சிகிச்சைக்காக தனது உறவினர்கள் இரண்டு பேருடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற கார் திடீரென ஆம்புலன்ஸ் முன்னே திரும்பியதால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் பாலத்தின் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது

இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பெண் நோயாளி அவருடன் வந்த உறவினர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்டனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய பெண் நோயாளி மற்றும் உறவினர்களை மாற்று ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வைகை ஆற்று பாலத்தின் தடுப்புகளை மோதி நின்றதால் பெரிய அசம்பாவிதமும் இன்றி சிறிய காயத்துடன் ஆம்புலன்சில் பயணித்த நோயாளிகள் உட்பட நான்கு பேர் தப்பித்தனர். இந்த விபத்துக் குறித்து கானாவிளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் கவிழ்ந்து கிடக்கும் ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இந்த விபத்தினால் குன்னூர் ஆற்றுப்பாலத்தில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேனியில் விபத்து
முன்னதாக கடந்த பிப்ரவரி 21ம் தேதியும் விபத்து ஏற்பட்டது. தேனி மாவட்டம் போடியிலிருந்து பிப்ரவரி 21ம் தேதி காலை மதுரை நோக்கி தனியார் பேருந்து 50-க் கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பகல் 12 மணியளவில் ஆண்டிபட்டியைக் கடந்து டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே பேருந்து சென்றது. அப்போது, திருமங்கலத்தில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வடுகபட்டி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்து திசைமாறி அருகில் உள்ள மரத்தில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. காயமடைந்த பேருந்து பயணிகள் 37 பேர், காரில் வந்த 4 பேர் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த அல்லி நகரம் அசோக்குமார் (40), விருதுநகர் கணேஷ்ராம் (49), பண்ணைப்பட்டி போஸ் (30), மேல்மங்கலம் ராமையா (79), ஸ்ரீரங்கபுரம் கணேசன் (62), உத்தமபாளையம் சுபாஷினி (26) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications