எப்படி இருந்த இடம் இப்படி ஆகிவிட்டதே... தேனியில் உற்சாகமிழந்த ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள்..!
தேனி: அதிமுகவில் நடந்து வரும் அக்கப்போருக்கு இடையே சென்னையில் இருந்து புறப்பட்டு தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு சென்றிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னையில் இருந்து தனது ரேஞ்ச் ரோவர் கார் மூலம் சாலைவழியாக பயணம் மேற்கொண்ட அவருக்கு வழியில் எந்த இடத்திலும் அதிமுகவினர் வரவேற்பு அளிக்கவில்லை.
இதைவிட அவரை பெரியகுளத்தில் வரவேற்பதற்காக திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் யார் முகத்திலும் உற்சாகமில்லை.

யார் பெரியவர்?
அதிமுகவில் யார் பெரியவர் என்ற பலப்பரீட்சை நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் செல்வாக்கை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழுவுக்கு பிறகு வெகுண்டெழுந்த ஓ.பன்னீர்செல்வம் மூன்று நாட்களாக சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இருந்தவாறு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

சிறப்பு வழிபாடு
புதன்கிழமை மதியமே தேனிக்கு புறப்பட இருந்த அவர், அக்டோபர் 2-ம் தேதி காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதால் தானும் பங்கேற்க வேண்டி தனது பயணத் திட்டத்தை மாற்றியமைத்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி கோயிலின் சிறப்பு குறித்து ஆதரவாளர் ஒருவர் எடுத்துக்கூறியதுடன், ஒரு எட்டு வந்துட்டுப் போங்க நினைத்தது நடக்கும் என அழைப்பு விடுத்திருக்கிறார். அதன் பேரில் புதன்கிழமை மாலை அங்கு சென்ற அவர் மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கார் மூலம்
இன்று ஆளுநர் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சென்னை பசுமை வழிச்சாலையில் மதிய உணவை முடித்துக்கொண்டு சாலை மார்க்கமாக தனது ரேஞ்ச் ரோவர் காரில் தேனிக்கு புறப்பட்டார் ஓ.பி.எஸ். சென்னையில் இருந்து தேனி செல்லும் வழியில் செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், என பல மாவட்டங்கள் இருந்தாலும் அங்கு எங்குமே ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு தரப்படவில்லை.

உற்சாகமின்றி
இந்நிலையில் இரவு சுமார் 9 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டை சென்றடைந்த ஓ.பி.எஸ்.க்கு உற்சாகமிழந்த நிலையில் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஓ.பி.எஸ். ஊருக்கு வருகிறார் என்றால் களைக்கட்டி காணப்படும் அவரது வீடு களையிழந்து காணப்பட்டது. தன்னை வரவேற்க வந்தவர்களுடன் ஒரு அரைமணி நேரம் சந்தித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார் ஓ.பி.எஸ். இதனிடையே நாளை மற்றும் அடுத்தடுத்த நாட்களில் ஓ.பி.எஸ். மிக முக்கிய ஆலோசனை நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications