தேனியில் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு.. கோயில் நிலவறையிலிருந்து கண்டெடுத்த ஆய்வாளர்கள்!
தேனி: தேனி மாவட்டத்தில் விநாயகர் கோயில் ஒன்றில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டை பல்வேறு மன்னர்கள், பல்வேறு காலங்களில் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். இதற்கான சான்றுகள் அவ்வப்போது கிடைக்கப்பெறுகின்றன. அகழாய்வு மூலம் சில குறிப்பிட்ட இடங்களில் இதற்கான சான்றுகள் கிடைத்தாலும், பெரும்பாலான நேரங்களில் மக்கள் நிலங்களை தோண்டும்போது கல்வெட்டுகளும், சிலைகளும், நாணயங்களும் கிடைப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல கோயில்களின் நிலவறைகளிலும் இதுபோன்ற தொல் பொருட்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படுகின்றன.

அப்படியாகத்தான், தேனி மாவட்டத்தின் சில்வார்பட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் நிலவறையை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தலைமையிலான ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கல், 3 அடி உயரம், 2.5 அடி அகலம், அரை அடி தடிமன் அளவில் உள்ளது. இது, அங்குள்ள சுவருடன் வைத்து பூசப்பட்டிருக்கிறது.
இக்கல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம், சூரியன், சந்திரன் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன. அவற்றின் கீழே 'ஸ்ரீஹாலபையா கவுடா கிராம வேல்பரார பட்டா' என கல்வெட்டு எழுதப்பட்டிருக்கிறது. இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் நுார்சாகிபுரம் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் முருகேசபாண்டியன், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் இந்த கல்வெட்டு 500 ஆண்டுகளுக்கு முந்ததையது என்பதை உறுதி செய்தனர்.
இதில் எழுதியுள்ளதை மொழி பெயர்த்த ஆய்வாளர்கள், ஸ்ரீஹாலபையா கவுடாவின் ஆளுமைக்குள் உள்ள கிராமம் இது என்றும், இக்கிராமத்தின் எல்லைக்கல்தான் இந்த கல்வெட்டு எனவும் கூறியுள்ளனர். 16ம் நூற்றாண்டில் இப்பகுதி ஸ்ரீஹாலபையா கவுடா எனும் குறுநில மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. இவர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கர்நாடகாவில் இருந்து சில்வார்பட்டி பகுதியில் குடியேறியவராக இருக்கலாம் என்றும் கல்வெட்டு உணர்த்துகிறது. இவருடன் குடியேறிய மக்கள் இக்கோயிலை புனரமைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அதற்கான சான்றாக இக்கல்வெட்டு இருக்கிறது.
மட்டுமல்லாது கோயிலின் சில சிற்பங்களும் இந்த கல்வெட்டின் காலத்தை ஒத்து இருக்கின்றன. கோயில் இந்த குறுநில மன்னர் காலத்தில் புனரமைக்கப்பட்டிருக்கிறது என்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கல்வெட்டை தொடர்ந்து, அருகில் இருக்கும் கோயில்களிலும் இதே காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஏதேனும் கிடைக்கின்றதா? என்று ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications