Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு.. கோயில் நிலவறையிலிருந்து கண்டெடுத்த ஆய்வாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தில் விநாயகர் கோயில் ஒன்றில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டை பல்வேறு மன்னர்கள், பல்வேறு காலங்களில் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். இதற்கான சான்றுகள் அவ்வப்போது கிடைக்கப்பெறுகின்றன. அகழாய்வு மூலம் சில குறிப்பிட்ட இடங்களில் இதற்கான சான்றுகள் கிடைத்தாலும், பெரும்பாலான நேரங்களில் மக்கள் நிலங்களை தோண்டும்போது கல்வெட்டுகளும், சிலைகளும், நாணயங்களும் கிடைப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல கோயில்களின் நிலவறைகளிலும் இதுபோன்ற தொல் பொருட்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படுகின்றன.

 Discovery of 500-year-old Kannada inscription in Theni district

அப்படியாகத்தான், தேனி மாவட்டத்தின் சில்வார்பட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் 500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் நிலவறையை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தலைமையிலான ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இக்கல், 3 அடி உயரம், 2.5 அடி அகலம், அரை அடி தடிமன் அளவில் உள்ளது. இது, அங்குள்ள சுவருடன் வைத்து பூசப்பட்டிருக்கிறது.

இக்கல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம், சூரியன், சந்திரன் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன. அவற்றின் கீழே 'ஸ்ரீஹாலபையா கவுடா கிராம வேல்பரார பட்டா' என கல்வெட்டு எழுதப்பட்டிருக்கிறது. இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் நுார்சாகிபுரம் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் முருகேசபாண்டியன், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் இந்த கல்வெட்டு 500 ஆண்டுகளுக்கு முந்ததையது என்பதை உறுதி செய்தனர்.

இதில் எழுதியுள்ளதை மொழி பெயர்த்த ஆய்வாளர்கள், ஸ்ரீஹாலபையா கவுடாவின் ஆளுமைக்குள் உள்ள கிராமம் இது என்றும், இக்கிராமத்தின் எல்லைக்கல்தான் இந்த கல்வெட்டு எனவும் கூறியுள்ளனர். 16ம் நூற்றாண்டில் இப்பகுதி ஸ்ரீஹாலபையா கவுடா எனும் குறுநில மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. இவர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கர்நாடகாவில் இருந்து சில்வார்பட்டி பகுதியில் குடியேறியவராக இருக்கலாம் என்றும் கல்வெட்டு உணர்த்துகிறது. இவருடன் குடியேறிய மக்கள் இக்கோயிலை புனரமைத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அதற்கான சான்றாக இக்கல்வெட்டு இருக்கிறது.

மட்டுமல்லாது கோயிலின் சில சிற்பங்களும் இந்த கல்வெட்டின் காலத்தை ஒத்து இருக்கின்றன. கோயில் இந்த குறுநில மன்னர் காலத்தில் புனரமைக்கப்பட்டிருக்கிறது என்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கல்வெட்டை தொடர்ந்து, அருகில் இருக்கும் கோயில்களிலும் இதே காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஏதேனும் கிடைக்கின்றதா? என்று ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+