செம காமெடி.. கடைசியில் "அம்மா" வீட்டில் தங்கி ஓட்டு வேட்டையாடும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
Recommended Video

தேனி: தேனியில் ஒரு காமெடியாக, ஜெயலலிதா தங்கிய வீட்டில் தங்கித்தான் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஓட்டு வேட்டையாடி வருகிறாராம்.
தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனியில் வீடு பிடித்து தங்கியுள்ளார். இந்த வீட்டில் தங்கித்தான் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதில் என்ன விசேஷம் என்று கேட்கலாம். இந்த வீடுதான் விசேஷம். காரணம் இதன் பின்னணியில் ஒரு சின்ன வரலாறு அடங்கியுள்ளது.

என்ஆர்டி நகர்
என்.ஆர்.டி.நகரில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் ஈ.வி.கே.எஸ்.குடியேறியுள்ளார். இந்த வீட்டில் தான் 2002-ல் மறைந்த ஜெயலலிதா தங்கியிருந்தார். பின்னர் 2006- சட்டமன்றத் தேர்தலின் போதும் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா சிங்கப்பூர் பங்களாவில் தான் ஓய்வெடுத்தார்.

அம்மா பங்களா
ஜெயலலிதா தங்கியிருந்ததற்கு பின்னர் சிங்கப்பூர் பங்களாவை அம்மா பங்களா என தேனி நகர மக்கள் அழைக்கத் தொடங்கினர். தற்போது அந்த அம்மா பங்களாவில் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் குடியேறியுள்ளார்.

ப்ரீயாகவே விட்ட ஓனர்
பங்களாவிற்கு சொந்தக்காரரான பாரதி சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளில் தொழில் செய்து வருபவர். மிளகு, ஏலக்காய் என வாசனை பொருட்கள் ஏற்றுமதி தொழில் செய்து வரும் பாரதி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாடகையின்றி வீட்டை தங்குவதற்கு அளித்துள்ளார்.

பெரிய ஆள் போல
இதற்கு ஓ.பி.எஸ்.தரப்பில் முட்டுக்கட்டை போட்டார்களா என நாம் விசாரித்ததில், யாரையும் அவ்வளவு எளிதாக நம்பாத ஜெயலலிதாவே தங்கியிருந்தார் என்றால், அப்ப பாரதியின் தொடர்புகள் எந்தளவுக்கு இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் தேனிக்காரர்கள்.

எல்லா வசதியும் உண்டாம்
எல்.இ.டி.தொலைக்காட்சி, ஏ.சி., பிரிட்ஜ், சோபா செட், வாஷிங்மெஷின் என அத்தனை பொருட்களும் வீட்டில் எப்போதும் இருக்குமாம். இதனால் இளங்கோவனுக்கு செலவு மிச்சம் என சொல்கின்றனர் உள்ளூர்க்காரர்கள். எது எப்படியோ கடைசியில் அம்மா வீட்டில் தங்கி இளங்கோவன் வாக்குக் கேட்க செல்கிறார்.
என்னவோ போங்கப்பா.. !












Click it and Unblock the Notifications