ஒன்னா படிச்சு... ஒன்னா எக்சாம் எழுதி... ஒரே நேரத்தில் அரசு பணியில் சேர்ந்த தாய், மகள்
தேனி: தாயும், மகளும் ஒரே பயிற்சி மையத்தில் பயின்று ஒன்றாக தேர்வு எழுதி.. அரசுப்பணியில் சேர்ந்துள்ள சுவாரஸ்ய நிகழ்வு சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரின் மனைவி சாந்திலட்சுமி. அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2014ம் ஆண்டு ராமச்சந்திரன் காலமானார்.
இந்நிலையில், சாந்தி லட்சுமி, தனது மூத்த மகள் தேன்மொழி உடன் சேர்ந்து அரசுப்பணித் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்ல முடிவு செய்தார். ஆசிரியர் ஒருவரின் இலவச பயிற்சி வகுப்பில் தாய் சாந்தி லட்சுமியும், மகள் தேன் மொழியும் சேர்ந்து ஒன்றாக படித்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு
சமீபத்தில் தமிழக அரசுப்பணி தேர்வானயத்தின் மூலம் குரூப் 4 பிரிவுக்கான தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுக்கு வயது தடையில்லை. 10ம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால் போதுமானது.

தேர்வு எழுதினர்
எனவே, தேர்வில் சாந்திலட்சுமியும், தேன்மொழியும் பங்கேற்று எழுதினார்கள். ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில், இருவரும் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றனர். தாயும், மகளும் ஒரேநேரத்தில் தேர்வு எழுதி அரசுப்பணி கிடைத்ததால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பணியிடம்
சுகாதாரத்துறையில் சாந்தி லட்சுமிக்கு பணியிடமும், இந்து அறநிலையத் துறையில் தேன்மொழிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தி லட்சுமி கூறியதாவது:எனது கணவர் இறந்தபின் வீட்டில் தனியாக இருந்தேன்.

வயது இல்லை
என் மகள் அரசுத் தேர்வு பயிற்சி வகுப்புக்குச் செல்வதை பார்த்து நானும் சென்று படித்தேன். சமீபத்தில் தமிழ்நாடு அரசின் குரூப் 4 தேர்வுக்கு வயது தடையில்லை, 10ம் வகுப்பு தகுதியிருந்தால் போதும் என்று பயிற்சி வகுப்பு ஆசிரியர் தெரிவித்தார்.

வேலை கிடைத்தது மகிழ்ச்சி
இதை ஏற்று நானும், மகளும் பயிற்சிவகுப்பில் பங்கேற்று, தேர்வு எழுதினோம். எங்கள் இருவருக்கும் வேலைகிடைத்துவிட்டது. எனக்கு சுகாதாரத்துறையில் கிடைத்துள்ளது.

மகளுக்கு பணி
தேனி மாவட்டத்தில் பணியிடம் ஒதுக்கப்படும் என நம்புகிறேன். என் மகளுக்கு இந்து அறநிலையத் துறையில் பணி கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications