வைகோவிடம் இருந்து போன திடீர் போன்! உருகிப்போன ஓ.பன்னீர்செல்வம்! துயர நேரத்தில் ஆறுதல்!

ஓ.பன்னீர்செல்வத்துக்கே நேரடியாக போன் போட்டு ஆறுதல் சொன்ன வைகோ.

Subscribe to Oneindia Tamil

தேனி: ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் திடீரென அழைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு ஆறுதல் சொல்லி தாயாரின் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

வைகோ தன்னிடம் நேரடியாக பேசுவார் என்பதை எதிர்பார்க்காத ஓ.பன்னீர்செல்வம் அவர் காட்டிய பரிவால் உருகிப் போயிருக்கிறார்.

இதனிடையே அதிமுக ஆட்சிக்காலத்தில் தன்னால் பயன் பெற்றவர்கள் பலரும் துக்கம் கூட விசாரிக்காததை எண்ணி ஓ.பன்னீர்செல்வம் ரொம்பவே நொந்து கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் அம்மா

ஓ.பன்னீர்செல்வம் அம்மா

ஓ.பன்னீர்செல்வத்தின் அம்மா பழனியம்மாள் தனது 95வது வயதில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்றிரவு காலமானார். ஜெயலலிதாவை அம்மா அம்மா என வாய் நிறைய ஓ.பன்னீர்செல்வம் அழைக்கும் நிலையில் அவரது பிறந்த நாளும், பெற்ற தாயின் இறந்த நாளும் பிப்ரவரி 24 என்ற ஒரே தேதியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதியை ஓபிஎஸ் கொண்டாடுவாரா அல்லது துக்கம் அனுசரிப்பாரா என ஒரு பக்கம் விவாதம் எழுந்துள்ளது.

வைகோ போனில் ஆறுதல்

வைகோ போனில் ஆறுதல்


இதனிடையே வைகோ, ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். இதில் வைகோ இரங்கல் தெரிவித்ததோடு தனது கடமை முடிந்தது என எண்ணிவிடாமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கே போன் போட்டு அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதலும் கூறியிருக்கிறார். வைகோவிடம் இருந்து தனக்கு போன் வரும் என்பதை எதிர்பார்க்காத ஓ.பி.எஸ். அவர் காட்டிய பரிவால் உருகிப் போயிருக்கிறார்.

ஜவாஹிருல்லா இரங்கல்

ஜவாஹிருல்லா இரங்கல்

இதனிடையே மமக தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள இரங்கல் பதிவு வருமாறு; ''முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) உடல் நலக்குறைவு காரணமாக உயர்நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். தாயை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு கூறியுள்ளார்.

ஆறுதல் சொல்லவில்லை

ஆறுதல் சொல்லவில்லை

மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள், மற்றுக்கட்சிகளில் உள்ள தன்னால் கடந்த ஆட்சிக்காலங்களில் பலன் பெற்றவர்கள் எல்லாம் தனக்கு ஆறுதல் தெரிவிக்கும் நிலையில், அதிமுகவில் கடந்த ஆட்சிக்காலங்களில் தன்னால் பயன் பெற்றவர்கள் பலர் ஆறுதல் சொல்லக்கூட முன்வரவில்லை என்பதை நினைத்த ரொம்பவே வருந்தியிருக்கிறார் ஓபிஎஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+