'தேவர் சிலை' முன்பு 'தேவர் மகனுக்கு' வரவேற்பு.. கமல் வருகையால் கலகலத்த உசிலம்பட்டி!
தேனி: உசிலம்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தை நிறுவனர் கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி பிரிவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும்,தலைவருமான நடிகர் கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் கமலஹாசனுக்கு உசிலம்பட்டி 'தேவர் சிலை' முன்பு கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனால் அங்கு ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். ஆனால் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போலீசார் அனுமதி வழங்காததால் எதுவும் பேசவில்லை. கைகும்பிட்டப்படி சென்றார்.

பின்னர் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் கிராம மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் அனுமதி இல்லாததால் அங்கும் பேசாமல் கையசைத்தபடி சென்றார்.
தொட்டப்பநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கொடி ஏற்ற அவரது கட்சியினரால் கொடி கம்பம் நடப்பட்டிருந்தது.ஆனால் அனுமதியில்லாமல் நட்டதாகக் கூறி கட்சிக்கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர்.

'தேவர் மகன்' திரைப்படத்தில் நடித்த பிறகு கமல்ஹாசனுக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு உயர்ந்ததாக திரையுலகில் கூறுவார்கள். தேனி மாவட்டம்.. அதிலும், உசிலம்பட்டி பகுதியும், முக்குலத்தோர் அதிகமாக உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications