ஒன்று சேர நான் ரெடி.. அவங்க ரெடியா? இறுதி முடிவு அண்ணன் எடப்பாடி தான் எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
தேனி: வரும் சட்டசபை தேர்தலை யாருடன் கூட்டணி வைத்து களம் காண்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்று சேர நான் ரெடி.. அவங்க ரெடியா என்றும், இறுதி முடிவினை அண்ணன் எடப்பாடி தான் எடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீர் ட்விஸ்ட்டாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் மௌனம் சாதித்து வருகிறது.

இவ்வாறு மவுனம் காத்து வருவதால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவருடன் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துவிட்டனர். தற்போதைய சூழலில் ஓபிஎஸ்ஸுடன் தெரிந்த முகம் என்றால் அது வெல்லமண்டி நடராஜனும் ஐயப்பன் எம்எல்ஏவும்தான்.
இந்த நிலையில் இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக, நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்ட செய்தியாளர்களிடம் போடி அலுவலகம் புறப்பட்ட ஓபிஎஸ் பேசினார்.
அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், "இன்று (வியாழன்) நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பின் முடிவை அறிவிக்கிறேன்," என்று அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றார்.
இதனிடையே, தேனி மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகச் செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் தலைமையில் இன்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகாவது மௌனம் கலைப்பார் என ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார் எனவும், தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை அமமுக பொதுச் செயலாளர் தினகரனும், கூறி வருகிறார்.
வாக்கு சதவீதமே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால், ஓபிஎஸ்ஸை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜகவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
அண்மையில் சட்டசபை கூட்டத் தொடரின் போது ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது ஓபிஎஸ், தன்னுடன் இருக்கும் வெல்லமண்டி நடராஜன், ஐயப்பனுக்கு எம்எல்ஏ சீட், தனது மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட் தருவதென்றால் தான் திமுகவில் இணைய தயார் என சொன்னதாகவும் அதற்கு தலைமை ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ்ஸும் அவரது மகனும் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தனர். அடுத்து சேகர்பாபுவுடனும் ஆலோசனை நடத்தியதால் அவர் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது.
ஆனால் இன்று யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒன்றிணைய நான் ரெடி.. அவங்க ரெடியா.. டிடிவி தினகரனும் இதைத் தான் சொல்லி வந்தார். இறுதி முடிவு குறித்து அண்ணன் எடப்பாடி தான் எடுக்க வேண்டும். எல்லாரும் அண்ணன் தம்பியாக தான் இருக்கிறோம்.. குழப்பம் விளைவிக்க வேண்டியே சில தவறான செய்திகள் பரப்பி விடுகின்றனர். என்று கூறினார்.
மேலும் கூறுகையில், “ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடாது. தேனி மாவட்டத்தில் ஒன்றிணைந்து இருக்கும் போது நிர்வாகிகள் எப்படி இருந்தார்களோ.. அப்படித்தான் இப்போதும் உள்ளனர். அவர்களுக்காக தான் இன்று நான் இந்த கூட்டத்தினை கூட்டினேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரியத் தான் இந்த கூட்டம். அவர்கள் நீங்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என எனக்கு முடிவு எடுக்க அதிகாரம் கொடுத்துவிட்டனர்.
என்னுடைய அருமை அண்ணன் எடப்பாடி அவர்கள் கையில் தான் முடிவு இருக்கிறது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடியும், டிடிவி தினகரனும் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளனர். டிடிவி தினகரனும் கூட்டணிக்கு வர வேண்டும் என நட்பு ரீதியாக சொல்லி வருகிறார். நானும் அப்படித்தான் சொல்கிறேன். எனவே டிடிவியும் ஒன்றிணைவதற்கு எடப்பாடியிடம் வலியுறுத்த வேண்டும். ஒன்றிணைவதற்கு நான் ரெடி என சொல்லிவிட்டேன். முடிவு யார் கையில் இருக்கிறது. என்றார்.
-
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'











Click it and Unblock the Notifications