யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு!
தேனி: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று அதிகாலை யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கோவை அழைத்து வருகிறார்கள். காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து ஒரு வீடியோவில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதிகாலை 3 மணி அளவில் தேனியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் கோவையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் ஒரு இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் சங்கருக்கும் போலீஸாருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாத தெரிகிறது.


இதையடுத்து வழியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை போலீஸார் அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications