ஓ.பி.எஸ்.க்கு வெற்றிலை மாலை சூடிய ஆர்.பி.உதயகுமார்! பெரியகுளத்தில் குவிந்த தென்மாவட்ட நிர்வாகிகள்!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக தென் மாவட்ட நிர்வாகிகள் பலரும் பெரியகுளம் விஜயம் செய்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ஓ.பி.எஸ்.சை சந்தித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து பெற்றிருக்கின்றனர்.
இதனிடையே புத்தாண்டை ஒட்டி ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவருக்கு வெற்றிலை மாலை சூடியிருக்கிறார்.

ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்திலும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக கட்சியினர் ஆர்வம் காட்டுவதை அறியமுடிகிறது. அந்த வகையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.இல்லத்துக்கு படையெடுத்த தென்மாவட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் கூறி வாழ்த்தும் பெற்றனர்.

வெற்றிலை மாலை
ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஒரு பெரிய படையையே திரட்டி வந்திருந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மதுரை மாவட்ட அதிமுக இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு ஓ.பி.எஸ்.சை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார். மேலும், ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையை ஓ.பி.எஸ்.க்கு ஆர்.பி. உதயகுமார் சூடியுள்ளார். வெற்றியை தரும் வெற்றிலை மாலை என்ற முதுமொழி ஒன்று உண்டு.

மனம் விட்டு பேச்சு
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் எந்த வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த வெற்றிலை மாலையை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சூடினாரோ என அங்கிருந்த நிர்வாகிகளே பேசிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தன்னை சந்திக்க வந்த நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். சிறிது நேரம் மனம் விட்டு பேசியதாகவும் திமுக அரசின் செயல்பாடுகள் பற்றி அந்த பேச்சு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொங்கு மண்டலம்
இதேபோல் கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றிருக்கின்றனர். ஆட்சி மாறிய பிறகும் ஆதரவாளர்களும், கட்சியினரும் தங்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற வந்ததால் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications