ஓபிஎஸ் பண்ணை வீட்டிற்கு வந்த கொள்ளையர்கள்.. பணம், நகை இல்லாததால் கோபத்தில் செய்த செயல்!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ்ஸுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் ஒரு பண்ணை வீடு அமைந்துள்ளது.
பெரும்பாலும் ஓபிஎஸ் இந்த பண்ணை வீட்டில்தான் பார்வையாளர்களையும் முக்கிய நிர்வாகிகளையும் சந்திப்பது வழக்கம். இந்த வீட்டில் வைத்துதான் ஓபிஎஸ் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

பண்ணை வீடு
இந்த பண்ணை வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் ஒரு அறை உள்ளது. இந்த அறையில் ஏசி, டிவி, பிரிட்ஜ் என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த அறையில் பால்கனி வழியாக வந்தால் பண்ணை வீட்டிற்குள்ளே வந்துவிட முடியும். இந்த நிலையில் நேற்று முன் தினம இரவு அந்த பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் வழியாக கொள்ளையர்கள் ஏறிக் குதித்தனர்.

பன்னீர்செல்வம்
பின்னர் பன்னீர் செல்வம் ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்த அவர்கள் அங்கு ஏதேனும் பணம், நகை இருக்கிறதா என சல்லடை போட்டு தேடியுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். அப்படியே கீழே இறங்கி மற்ற பகுதிகளுக்கும் மர்மநபர்கள் சென்றுள்ளனர். அங்கும் அவர்கள் தேடி வந்தது கிடைக்கவில்லை.

சமையல் அறை
சமையல் அறைக்கு சென்று அங்காவது ஏதாவது தேருமா என பார்த்துள்ளனர். அங்கு உணவு கூட இல்லாததை பார்த்து மர்மநபர்களுக்கு கோபம் வந்துவிட்டது. இதையடுத்து உரிமையாளர் மீதான கோபத்தை காட்டுவதற்காக அவர் வீட்டில் இருந்த 54 இன்ச் டிவியை திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து நேற்று காலை இந்த பண்ணை வீட்டை பாதுகாவலர்கள் திறப்பதற்காக மாடிக்கு சென்றனர்.

ஓபிஎஸ்ஸின் ஓய்வறை
அப்போது ஓபிஎஸ்ஸின் ஓய்வறை உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓபிஎஸ்ஸுக்கும் பெரியகுளம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்கள் ஏதாவது கிடைத்ததா என சோதனை செய்தனர்.

முன்னாள் முதல்வர்
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் வீட்டிலேயே டிவி திருட்டு நடந்துள்ளதால் பெரியகுளம் காவல் துறை டிஎஸ்பி கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் குற்றம்சாட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல் அமைச்சர் துரைரமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி மலை மாஞ்சக்கொள்ளைபுதூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. அங்கு பணம், நகை இல்லாததால் கதவுகளை உடைத்த திருடர்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications