கனடாவில் இருந்த வந்த மகன்.. தேனியில் உயிரை பறித்த சாலை விபத்து.. ஓய்வு பெற்ற எஸ்பி குடும்பம் கதறல்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கனடாவில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற எஸ்பியின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து என்பது எப்போது எப்படி நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.நம்முடைய சிறிய கவனக்குறைவோ அல்லது எதிரே வருவோரின் சிறிய கவனக்குறைவோ விபத்திற்கு பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டுவது அல்லது வேண்டுமென்றே அசுர வேகத்தில் செல்வது போன்றவை விபத்திற்கு காரணமாகி விடுகிறது.

Theni former superintendents son worked in a hotel in Canada dies Road accident

10 முதல் 20 வினாடிகளில் இழக்கும் நிதானமோ அல்லது கவனக்குறைவோ தான் பெரும்பாலான விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. அந்த விபத்தால் பல கோடி பேரின் வாழ்க்கை ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறது. அப்படி ஒரு விபத்து தான் தேனி மாவட்டம் கூடலூரில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் பத்து நோன்பு பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் பண்டியராஜன் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் கார்த்திக் 35 வயதாகிறது. கார்த்திக் கனடாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதம் முன்பு தான் சொந்த ஊருக்கு வந்தார். கூடலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கூடலூர், வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் நிதிஷ்குமார் (24). மின்வாரிய ஊழியர். நேற்று மாலை கார்த்திக், நிதிஷ்குமார் ஆகிய இருவரும் கூடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கம்பத்திற்கு சென்றுள்ளார்கள். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார்.

கூடலூரில் அருகே அப்பாச்சி பண்ணை அருகே சென்றபோது, நிலை தடுமாறி எதிரே வந்த சரக்கு வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதி்ல் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். நிதிஷ்குமார் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி வழக்குப்பதிந்து சரக்கு வாகன டிரைவரான நாகபட்டினம் கீவலூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (34) என்பவரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+