இஎம்ஐயில் பைக் வாங்க போறீங்களா.. தேனியில் தனியார் நிதி நிறுவனத்திற்கு நடந்த தரமான சம்பவத்தை பாருங்க
தேனி: தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் இஎம்ஐக்கு இரு சக்கர வாகனம் வாங்கிய மீன் வியாபாரி தேனி நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குறிப்பிட்ட தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனம் அப்படி என்ன தவறு செய்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தேனி அரண்மனைப்புதூரை சேர்ந்த ராஜா என்ற மீன் வியாபாரி கடந்த 2018-ம் ஆண்டு தேனியில் உள்ள ஒரு தனியார் பைக் ஷோரூமில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். அதற்கு மீன் வியாபாரி ரூ.39 ஆயிரம் முன்பணம் செலுத்தி உள்ளார். மீதி பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் தவணை கடனில் பெற்றுள்ளார்.

புதிய பைக் வாங்கி ஓட்டி வந்த மீன் வியாபாரி ராஜா, அதற்கான கடன் தொகையை மாதாந்திர தவணையாக தனியார் நிதி நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தி வந்தார். பின்னர் கொரோனாபாதிப்பு ஏற்பட்டபோது தவணைத்தொகை செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் நிதி நிறுவனத்தின் ஊழியர் வந்து கேட்டதால், பாக்கி இருந்த ரூ.56 ஆயிரத்தை ஒரே தவணையாக செலுத்தினார்.
அதற்கு ஊழியர், கணினி ரசீது கொடுக்காமல், கையால் எழுதிய ரசீது கொடுத்துச் சென்றுள்ளார. சரி கடனை செலுத்தி விட்டோமே, வாகனத்துக்கான தடையில்லா சான்று பெறலாம் என்று ஷோரும் போன போது, அந்த நிதி நிறுவனம் தடையில்லா சான்று தரமறுத்துவிட்டது. இந்நிலையில் பணத்தை வசூல் செய்து சென்ற ஊழியர் அதை நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பறிமுதல் செய்து திரும்ப எடுத்துக் கொண்டனர். மீண்டும் திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார்கள். இதுகுறித்து தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மீன் வியாபாரி ராஜா சார்பில் வக்கீல் எஸ்.பி.பாண்டியன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். அதில், மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் நிர்வாகம், நிதி நிறுவன கிளை மேலாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக குறிப்பிட்டார். இந்த மனு மீது நீதிபதி சுந்தர், உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடந்தது.
விசாரணையை தொடர்ந்து தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மீன் வியாபாரி ராஜாவுக்கு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மோட்டார் சைக்கிளுக்கான தொகை ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications