தேனி தீபலட்சுமி.. பஸ் படிக்கட்டில் நின்றதுமே.. ஆண்டிப்பட்டி கண்டக்டர் பதறிட்டாரு.. கொடுமையை பாருங்க
தேனி: தேனியில் ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி வெளியே விழுந்துள்ளார் ஒரு பெண்.. இந்த வீடியோதான் நேற்றிலிருந்து இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தீபலட்சுமி... இவர் நேற்று மாலை தனியார் பஸ்ஸில் தேனிக்கு பயணம் செய்துள்ளார்.. பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்ஸில் ஏறியதுமே, படிக்கட்டுக்கு பக்கத்திலிருக்கும் பாதுகாப்பு கம்பியை கெட்டியாக பிடித்தபடி நின்றுகொண்டார்..

டிக்கெட்: இப்படி நின்றபடியே, காசு கொடுத்து பஸ் டிக்கெட்டையும் பெற்றுக் கொண்டார்.. அந்த பஸ் டிக்கெட்டை தன்னுடைய பர்ஸில் வைக்க முயன்றார்.. அதனால், கம்பியை அதுவரை பிடித்து கொண்டிருந்தவர், அதை விடுத்து கைப்பையில் டிக்கெட்டை வைத்திருக்கிறார்.. பிடிமானம் எதுவுமே இல்லாத நிலையில், எதிர்பாராத விதமாக பஸ்ஸிலிருந்து வெளியே தவறி விழுந்துவிட்டார்..
இதில் தலையில் படுகாயம் அடைந்த தீபலட்சுமிக்கு ரத்தம் கொட்டியது.. இதைப்பார்த்து பதறிப்போய் சக பயணிகள் அலறி கூச்சலிட்டார்கள்..
கதறி கூச்சல்: இதையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டு, படுகாயமடைந்த தீபலட்சுமியை பொதுமக்கள் மீட்டு தேனி மருத்துவமனையில் அனுமதித்தனர்... அங்கு தீபலட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.. இதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு தற்போது தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தீபலட்சுமி படிக்கட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி, காண்போரை பதைபதைக்க வைத்து வருகிறது.. இந்த வீடியோவில், படிக்கட்டுக்கு அருகிலிருக்கும் இருக்கையில் பயணிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.. அங்குள்ள கம்பியைதான் தீபலட்சுமி பிடித்து கொண்டிருக்கிறார்..
பதைபதைக்கும் வீடியோ: டிக்கெட்டை பர்ஸில் வைக்கும்போது, தடுமாறி பின்பக்கமாகவே படிக்கட்டில் தவறி விழுகிறார்.. இதை பார்த்து பதறிய கண்டெக்டர் தீபலட்சுமியை பிடிக்க முயல்கிறார்.. ஆனாலும், ஓடும் பஸ் என்பதால், ரோட்டிலேயே வந்து விழுந்தார் தீபலட்சுமி.
படிக்கட்டிலிருந்து பெண் தவறி விழுவதும், தவறி விழும் பெண்ணை நடத்துநர் காப்பாற்ற முயற்சிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இது தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications