Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ வைக்கும் வடகிழக்கு பருவமழை.. சர்ருனு எகிறிய வைகை அணை நீர்மட்டம்! 5 மாவட்ட மக்களுக்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

தேனி: கேரளா மற்றும் மூல வைகையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து வருகிறது. இதனையடுத்த்து அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயரத் தொடங்கியது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 18 ஆம் தேதி 66 அடி எட்டிய போது, 5 மாவட்ட மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

Vaigai Dam Flood Warning northeast monsoon

வைகை அணை

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் இன்று அதிகாலை வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதையடுத்து இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு 2 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் அணையின் மதகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சங்கு மூன்று முறை ஒலிக்க விடப்பட்டது அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணை 69 அடியை எட்டியது. தீபாவளி நாளான நேற்று வைகை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

வெள்ள எச்சரிக்கை

கரையோர மக்களை பாதுகாப்பாக வைக்கும் படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை வாடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்ட வைகை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

நீர் வெளியேற்றம்

ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுப்பணித்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 5,793 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக ஏற்கனவே சென்று கொண்டிருந்த வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் உடன் சேர்த்து தற்போது ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு மொத்தமாக 2350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

வைகை அணையின் மொத்த உயரம்

வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி என்ன சொல்லப்பட்டாலும் அணை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் 10 முதல் 20 அடிக்கு சேரும் சகதியமாகவே இருக்கிறது என சொல்லப்படுகிறது. எனவே தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் அணையை தூர்வாரினால் மழைக்காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும் என்கின்றனர் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+