தேனியில் குளித்துவிட்டு தலையை காயவைக்க மாடிக்கு போன சஷ்மிதா.. எந்த பெற்றோரும் பார்க்கக் கூடாத கோலம்
தேனி: தேனி பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் என்பவர் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் சஷ்மிதா என்பவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் வீட்டில் குளித்துவிட்டு தலையை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றார். அப்போதுதான் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
வீட்டின் மொட்டை மாடியில் நடந்து செல்லும் போது, அதுவும் காலில் ஈரத்துடன் நடந்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் காலில் உள்ள ஈரம் வழுக்கி தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் மொட்டை மாடியில் வேடிக்கை பார்க்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நொடி நிதானம் தவறினாலும் வாழ்க்கை முடிந்துவிடும். அதேபோல் மொட்டை மாடியில் உட்காரும் போதும், தள்ளி பாதுகாப்பாக உட்கார வேணடும். கவனக்குறைவாக இருந்தாலும், அடுத்த நொடி வாழ்க்கை நிச்சயமில்லாமல் போகும். தேனியில் அப்படி ஒருசம்பவம் நடந்துள்ளது.

தேனி பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 48 வயதாகும் விவேகானந்தன் என்பவர் அந்த பகுதியில் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2-வது மகள் சஷ்மிதா (16) தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
விவேகானந்தன் தினமும் காலையில் தனது மகளை தெருவின் எல்லையில் உள்ள மெயின்ரோடு வரை அழைத்துச் சென்று பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைப்பது வந்தார். அதுபோல், பள்ளி முடிந்து மாலை தனது மகள் திரும்பி வரும்போது மெயின்ரோட்டில் காத்திருந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச் செல்வார். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வந்த சஷ்மிதாவை மெயின்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகளை வீட்டில் விட்டுவிட்டு அவர் மெடிக்கலுக்கு போய் விட்டார்.
நேற்று முன்தினம் இரவில், சஷ்மிதா தனது வீட்டில் குளித்துவிட்டு தலையை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார. 2 மாடியை கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறு அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மாணவியை உடனே மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் விவேகானந்தன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications