Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் குளித்துவிட்டு தலையை காயவைக்க மாடிக்கு போன சஷ்மிதா.. எந்த பெற்றோரும் பார்க்கக் கூடாத கோலம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் என்பவர் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் சஷ்மிதா என்பவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் வீட்டில் குளித்துவிட்டு தலையை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றார். அப்போதுதான் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.

வீட்டின் மொட்டை மாடியில் நடந்து செல்லும் போது, அதுவும் காலில் ஈரத்துடன் நடந்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் காலில் உள்ள ஈரம் வழுக்கி தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் மொட்டை மாடியில் வேடிக்கை பார்க்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நொடி நிதானம் தவறினாலும் வாழ்க்கை முடிந்துவிடும். அதேபோல் மொட்டை மாடியில் உட்காரும் போதும், தள்ளி பாதுகாப்பாக உட்கார வேணடும். கவனக்குறைவாக இருந்தாலும், அடுத்த நொடி வாழ்க்கை நிச்சயமில்லாமல் போகும். தேனியில் அப்படி ஒருசம்பவம் நடந்துள்ளது.

What happened to a 16-year-old student in Theni on the terrace of her house


தேனி பழனிசெட்டிபட்டி வாசவி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 48 வயதாகும் விவேகானந்தன் என்பவர் அந்த பகுதியில் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2-வது மகள் சஷ்மிதா (16) தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.

விவேகானந்தன் தினமும் காலையில் தனது மகளை தெருவின் எல்லையில் உள்ள மெயின்ரோடு வரை அழைத்துச் சென்று பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைப்பது வந்தார். அதுபோல், பள்ளி முடிந்து மாலை தனது மகள் திரும்பி வரும்போது மெயின்ரோட்டில் காத்திருந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச் செல்வார். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வந்த சஷ்மிதாவை மெயின்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகளை வீட்டில் விட்டுவிட்டு அவர் மெடிக்கலுக்கு போய் விட்டார்.

நேற்று முன்தினம் இரவில், சஷ்மிதா தனது வீட்டில் குளித்துவிட்டு தலையை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார. 2 மாடியை கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறு அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மாணவியை உடனே மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் விவேகானந்தன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+