2024 பொதுத் தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்துவோம்! கோழிக்கோடு நிகழ்ச்சியில் திருமாவளவன் உறுதி!
கோழிக்கோடு: 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்துவோம் என சூளுரைத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ர சமூக சீர்த்திருத்தவாதி அய்யங்காளியின் 158வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
கேரளாவில் ஒரு காலத்தில் அமைதியாக கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் மணிச்சத்தத்துடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தவர் அய்யங்காளி.சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்ட அவர், தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முதல் போராளியாகவும் திகழ்ந்தவர்.
கேரள வெல்ஃபேர் பார்ட்டி சார்பில் அவரது 158வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திருமாவளவன், பாஜக ஒரு பாசிச கட்சி என்றும் அதனை தனிமைப்படுத்த வேண்டும் என்றால் ஜனநாயக முற்போக்கு சக்திகள் தங்களுக்குள் உள்ள அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒன்று பட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் இப்போதே அதற்கான முன்னோட்டப் பணிகளை காங்கிரஸ், பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் திருமாவளவன் முன் வைத்துள்ள மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற இந்தக் கோரிக்கை தேசிய அரசியல் களத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications