கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164; மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் 164 பேருக்கும் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகவேகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பரவலில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் இரவு ஊரடங்கு
இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

164 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள், ஊழியர்கள் , அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைகளில் இதுவரை மொத்தம் 164 கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.

132 பேருக்கு பாதிப்பு
அதேபோல் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெர்ளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 132 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கூடங்குளம் அரசு மருத்துவமனை, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனை ஆகியவற்றில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர கண்காணிப்பு
மேலும் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications