தகுதி நீக்க வழக்கால் பரபரப்பில் தமிழகம்.. ஆனால் குற்றாலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் எல்லோர் பார்வையும் குற்றாலம் பக்கம் திரும்பி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் எல்லோர் பார்வையும் குற்றாலம் பக்கம் திரும்பி உள்ளது.

    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார்குடி ஆட்கள் அவர்கள் இருக்கும் ரெசார்ட்டிற்கு பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி சத்யநாராயணன் இன்று இந்த தீர்ப்பை வழங்க உள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    தங்கி கொண்டு இருக்கிறார்கள்

    தங்கி கொண்டு இருக்கிறார்கள்

    இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பிற்காக தினகரன் தரப்பு எப்போதோ தயாராகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் இந்த வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. இதனால் தினகரன் உடனடியாக தனது ஆதரவு எம்எல்ஏக்களை குற்றாலத்தில் சென்று தங்க சொன்னார்.

    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    தமிழகமே தகுதி நீக்க வழக்கு காரணமாக பரபரப்பில் இருக்கிறது. ஆனால் அந்த பரபரப்பு எல்லாம் 18 எம்எல்ஏக்களின் 16 பேர் தங்கி இருக்கும் குற்றாலம் ரெசார்ட்டில் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எல்லோரும் ரெசார்ட்டில் எப்படி அமைதியாக குளித்து, சாப்பிட்டு ''வீக் எண்டை'' கொண்டாடுவது போல கொண்டாடினார்களோ அதேபோல் இன்றும் சாந்தமாக இருக்கிறார்கள். தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று அவர்களுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். அதனால் பெரிய பரபரப்பு இல்லையாம்.

    மாற்றம்

    மாற்றம்

    இந்த தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் 18 எம்எல்ஏக்களும் குற்றாலத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் கேரளாவில் உள்ள சில முக்கியஸ்தர்களின் ஹோட்டலில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    தயார்

    தயார்

    அதேபோல் இவர்களை சென்னைக்கு கிளம்ப தயாராக இருக்கும்படியும் தினகரன் கூறியுள்ளதாக தகவல்கள் வருகிறது. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என்று இவர்கள் மீண்டும் மனு அளிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் உடனடியாக இப்படி மனு அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், அவர்கள் இன்று இரவே கூட சென்னைக்கு கிளம்ப வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+