இதுதான் மாஞ்சோலை மக்களின் மனசு.. திருநெல்வேலி அரசு பேருந்தில் தமிழரசி செயலுக்கு குவியும் பாராட்டு
திருநெல்வேலி: குப்பைக்கூளமாக கிடந்த மாஞ்சோலை அரசு பஸ்சை சுத்தம் செய்த பெண் பயணியின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல நாட்களாக குப்பை கூளங்களுடன் பயணித்த அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை காண பொறுக்காமல் , மாஞ்சோலையைச் சேர்ந்த தமிழரசி என்ற பயணி தனது வீடு போல நினைத்து சுத்தம் செய்தார். இதை கண்ட பயணிகள் பலரும் அவரை பாராட்டி வருகிறார். சமூக ஊடகங்களிலும் பலர தமிழரசியை பாராட்டி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை எஸ்டேட். மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளை சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கிய 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற நிறுவனம் அதனை மாஞ்சேலை எஸ்டேட் என்று பெயரிட்டு தேயிலை பயிர்களை பயிரிட்டு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குத்தகை வரும் 2028-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தேயிலைத் தோட்டப்பணிகளை நிறுத்தி அங்கே உள்ள பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தது அந்த நிறுவனம்.நான்கு தலைமுறைகளாக வேலை செய்து வந்த மக்கள் மாஞ்சோலையைவிட்டு வெளியேறி வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் மற்றும் அக்டோபர் என்று மூன்று மாதங்களில் வேலை நிமித்தமாக மக்கள் கணிசமாக வெளியேறிவிட்டனர். இப்போது ஓரளவே மக்கள் அங்கு இருக்கிறார்கள்.
மக்கள் பலர் வெளியேறிவிட்டார்கள் என்றாலும், மாஞ்சோலைக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு நாளும் திருநெல்வேலியில் இருந்து ஒரு பேருந்து காலை மற்றும் மாலை என இரண்டு முறை மாஞ்சோலைக்கு வந்து செல்கிறது. அங்கு தேயிலை தோட்டப்பணிகள் நின்று போன நிலையில், அடிப்படை வசதிகள் சரியாக இல்லை.. சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
தபால் நிலையம் மூடப்பட்டு விட்டது. தேயிலை தோட்டங்கள் செடிகள் பறிக்கப்படாததால் வளர்ந்து புதர்மண்டிப்போய் காணப்படுகின்றன. ஆனாலும் அங்கிருந்து கணிசமான மக்கள் வெளியேறவில்லை.. தாங்கள் பல தலைமுறையாக வாழ்ந்த மண்னை விட்டு போய் எங்கு வாழ்வது என்று தெரியாமல் தவிப்புடன் இருக்கிறார்கள். மேலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என்ற ஆதங்கத்துடன் இருக்கும் அவர்கள், தங்களை நிச்சயம் அரசு கவனிக்கும் என்ற நம்பிக்கையில் அங்கேயே வாழ்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊத்து பகுதியில் இருந்து அம்பைக்கு அரசு பேருந்து வழக்கம்போல் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் நாலுமுக்கு, காக்காச்சியை கடந்து மாஞ்சோலைக்கு வந்தது. அந்த பஸ்சில் சில பயணிகள் பயணித்தனர். மாஞ்சோலையில் டீ குடிப்பதற்காக டிரைவர் பேருந்தை சிறிதுநேரம் நிறுத்தி இருந்தார். மாஞ்சோலையைச் சேர்ந்த பயணிகள் பஸ்சில் ஏறினர். அப்போது பஸ்சில் குப்பைக்கூளமாக கிடந்துள்ளது.
இதனைப் பார்த்த மாஞ்சோலையைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் பயணி, பஸ்சில் இருந்த குப்பைகளை துடைப்பத்தை எடுத்து வந்து அகற்றி சுத்தம் செய்தார். தங்களை பல காலமாக பாதுகாத்து வந்து கொண்டிருக்கும் பஸ் குப்பைக்கூளமாக கிடந்ததை பார்க்க சகிக்காமல் தமிழரசி சுத்தம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் காணொலியாக பரவியது. இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். மாஞ்சோலை உள்பட எந்த மலைக்கு செல்பவர்களும் தயவு செய்து குப்பைகளை வீசாதீர்கள்.. அது மலையின் அழகை மட்டுமல்ல.. அங்குள்ள வனவிலங்குகளையும் அழித்துவிடும்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications