கிரையோஜெனிக் டெக்னாலஜில நம்ம சாதிக்க இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்.. விஞ்ஞானி நம்பி நாராயணன்
குற்றாலம்: நிலவுக்கு அனுப்பப்படும் சந்திராயன்-2 விண்கலம் இம்முறை நிலவில் நேரடியாக இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தென்காசியை அடுத்த குற்றாலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தியா மேற்கொண்டு வரும் விண்வெளி ஆய்வுகள் ஒவ்வொன்றையும், வளர்ந்த நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக நம்பி நாராயணன் கூறினார்.

ஏற்கனவே அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம் சந்திரமண்டலத்தில் இறங்காமல் ஆய்வு நடத்தியதாக குறிப்பிட்டார் நம்பி நாராயணன்.
ஆனால் தற்போது அனுப்பப்பட உள்ள சந்திராயன்-2 , நிலவில் இறக்கப்பட்டு முக்கிய ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார். நம்மோடு விண்வெளி ஆய்வில் ஒப்பிடக்ககூடிய வகையில் உள்ள நாடுகள் நம்மை பார்த்து அதிர்ச்சி, பொறைமை மற்றும் போட்டி மனப்பான்மை கொள்ளும் வகையில் இந்த ஆய்வு முடிவுகள் இருக்கலாம்.
ஏனெனில் நிலவில் தரையிறங்க உள்ள சந்திராயன் 2 பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்த உள்ளது என்றார். ஆனால் ஒன்றிரண்டு நாடுகளை தவிர விண்வெளி துறையில் நம்மோடு ஒப்பிடக்கூடிய அளவில் வேறு நாடுள் இல்லை என்றார் நம்பி நாராயணன்.
பிஎஸ்எல்வி ராக்கெட் இந்தியாவிற்கு ஒரு மைல்கல் என கூறிய அவர், ஜிஎஸ்எல்வி மாாக் ராக்கெட் திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்க இன்னும் சில காலங்கள் நமக்கு தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications