மீண்டும் மீண்டும் தாக்குதல்.. நாங்குநேரி சின்னதுரைக்கு காங்கிரஸ் நிதியுதவி.. நேரில் ஆறுதல்
நெல்லை: கடந்த 2023ல் பள்ளியில் படிக்கும் சக மாணவரால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மாணவர் சின்னதுரை படுகாயமடைந்திருந்தார். வீடுபுகுந்து அவரை சகமாணவர்கள் வெட்டியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலுக்கு பிறகு குணமான சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதற்கிடையே தான் காங்கிரஸ் சார்பில் அவருக்கு நிதியுதவி என்பது வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் சின்னதுரை. கடந்த 2023ம் ஆண்டு வீடு புகுந்து அவர் மீது சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். இந்த கொடூர சம்பவம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடந்தது.

சின்னதுரை பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் வேறு ஜாதியை சேர்ந்த அவருடன் பயிலும் மாணவர்கள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சின்னதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சின்னதுரை மீண்டு வந்தார்.
7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர் சின்னதுரை மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவரின் உயர்கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு பிறகு அவர் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சின்னதுரை தனது படிப்பை மட்டும் விட்டுவிடவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
தற்போது சின்னதுரை கல்லூரியில் படித்து வருகிறார். இப்படியான சூழலில் தான் இப்போது மீண்டும் சின்னதுரை மீது நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் மீண்டும் அவர் மீதான தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் தான் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரையை காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் சந்தித்து பேசினார். அப்போது மாணவருக்கு அவர் ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.
இந்த வேளையில், சின்னதுரை, ‛‛தன்மீது ஜாதிய ரீதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை. இன்ஸ்டாகிராம் நண்பர்கள் அழைத்ததால் அங்கு சென்றேன். அப்போது தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று கூறினார். இதை கேட்ட ரஞ்சன் குமார், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவுவதாக கூறினார். அதன்பிறகு சின்னதுரைக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications