தமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது.. ஒரே நாளில் ரூ. 1 கோடி பணம் சிக்கியது!
Recommended Video

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் பண வேட்டையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டன. இதன் ஒரு கட்டமாக வாகனத் தணிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

தேர்தல் நடைபெறும் தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனைகளில் ஈடுபடுகின்றனர். கானூர் என்ற இடத்தில் ரூ. 50 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் ரூ. 20 லட்சம் பறிமுதலாகியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்தில் வி.கே.புதூர் சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோமதி சங்கரநாராயணன் தலைமையில் பறக்கும் படை வாகன சோதனைநடத்தினர். இந்த சோதனையின் போது ஒரு இனோவா கார் வந்தது. அந்த காரை முழுமையாக சோதனையிட்டதில் காரிலிருந்து19 இலட்சத்து 94ஆயிரத்தி 500 ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடியை சேர்ந்த சங்கரிடம் நடத்திய விசாரணையில் பணம் கொண்டு செல்வதற்க்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததைத்தொடர்ந்து 19 இலட்சத்து 94ஆயிரத்தி 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதே போல தமிழகத்தில் மேலும் சில இடங்களிலும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications