அப்பத்தை பங்கு போடும் குரங்குகள்.. தொகுதி பங்கீடு குறித்து கமல் கடும் தாக்கு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் -வீடியோ
நெல்லை: அப்பத்தை பங்கு போடும் குரங்காக மாறிவிட்டார்கள் என தொகுதி பங்கீடு குறித்து கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றன.

இதில் சில கட்சிகள் தாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையை கொடுக்காவிட்டால் கூட்டணிக்கு செல்ல மறுக்கின்றன.
இந்த நிலையில் நெல்லையில் மக்கள் நீதி மய்யத்தில் பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் பேசுகையில் உங்களுக்கு இத்தனை தொகுதி, அவர்களுக்கு இத்தனை தொகுதி எனன பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
இதை பார்க்கும் போது குரங்கு அப்பத்தை பங்கு போடுவதுபோல் உள்ளது என்று அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications