பாஜகவில் மன வருத்தத்தில் உள்ளேன்... நம்பி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை -நயினார் நாகேந்திரன்
நெல்லை: பாரதிய ஜனதா கட்சியில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.
மாநில துணை தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மன வருத்தத்தில் இருப்பதாக கூறியிருப்பது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மன வருத்தம்
அதிமுக முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் கடந்த 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அப்போதைய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் பாஜகவுக்கு வந்த இவர் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போதே நயினார் நாகேந்திரனின் அரசியல் செல்வாக்கு, அனுபவம், பணபலம், ஆட்பலம் உள்ளிட்ட விவரங்களை எல்லாம் அமித்ஷா காதில் போட்டுவைத்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

கடும் முயற்சி
தமிழக பாஜக தலைவர் பதவியை குறிவைத்து செயல்பட்ட நயினார் நாகேந்திரன் இதற்காக பலமுறை டெல்லிக்கு படையெடுத்து வாரக்கணக்கில் தங்கி தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அது எதுவும் பலிக்காததால் கடந்த 4 மாதமாகவே கடும் அப்செட்டில் இருந்தார். இதனிடையே கொரோனா பரபரப்பு ஏற்பட்டதால் தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்து வந்த இவர் இப்போது மவுனம் கலைத்துள்ளார்.

முக்கியத்துவம் இல்லை
தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், பாஜகவில் மன வருத்தத்தில் இருக்கிறேன் என்றும், நம்பிக்கையோடு பாஜகவுக்கு வந்தவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். தலைமை மீது தமக்கு மன வருத்தம் இருந்தாலும் கட்சி மாறப்போவதில்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். இவரது இந்தக் கருத்து பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஏதோ ஒரு முடிவு
அண்மையில் நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கே சென்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சமாதானம் செய்ததோடு அவருக்கு முக்கியமான சில வாக்குறுதிகளையும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது சிரித்த முகத்துடன் பேசி, விருந்து வைத்து எல்.முருகனை வழியனுப்பிய நயினார், இன்று வெளிப்பட்ட இந்த கருத்து அவர் ஏதோ ஒரு முடிவில் இருப்பதையே காட்டுகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக நயினார் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications