கப்பல் வேலைக்கு ஆசைப்பட்ட நாங்குநேரி சின்னதுரை.. கலெக்டராக விரும்பிய தங்கை! இப்படி வெட்டிட்டாங்களே
திருநெல்வேலி: நாங்குநேரியில் சாதி வெறியர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னதுரை கப்பலில் வேலை செய்ய விரும்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளியில் சின்னத்துரை என்ற பட்டியலின மாணவர் பள்ளியில் சக மாணவர்கள் சிலரால் சாதி ரீதியாக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வந்து இருக்கிறார். அது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவர் புகார் அளித்துள்ளார். அதன் காரணமாக தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து கண்டித்து உள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆதிக்க சாதி மாணவர்கள் 6 பேர் சின்னதுரை வீட்டுக்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற அவரது தங்கை சந்திரா செல்வி என்ற 13 வயது சிறுமிக்கும் வெட்டி விழுந்துள்ளது. சின்னதுரையின் தாத்தாவை அவர்கள் கீழே தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் மாரடைப்பில் இறந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னதுரைக்கும் அவரது தங்கைக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வரும். பல்வேறு கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
பள்ளிகளில் நிலவும் சாதிய கொடுமைகளை கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் நேரில் சென்று சிறுவன் சின்னதுரையையும் அவரது தங்கையையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அங்கு நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை விசாரித்தார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட விரிவான அறிக்கையில், "நாங்குனேரியில் சின்னத்துரை(17) மற்றும் அவர் தங்கை(13) மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்கியது ஜாதிவெறி தலைக்கேறிய ஆதிக்கஜாதி மாணவர்கள். சின்னத்துரைக்கு கப்பலில் பணி புரிய வேண்டும் என்ற லட்சியம்.
அவர் தங்கை சந்திராவிற்கு கலெக்டராக வேண்டுமாம். இது போன்ற பிஞ்சுகளின் கனவு நனவாக அந்த பகுதி வன்கொடுமை பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஜாதிவெறி மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் எனவும் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
அந்த தங்கை தன் உயிருக்கும் அஞ்சாது தன் அண்ணன் உயிரை காப்பாற்றியிருக்கிறாள். அதனால் அவளது இடதுகை மற்றும் வலது கை விரல்களில் வெட்டுக்காயங்கள். அவள் தடுத்திருக்காவிட்டால் சின்னத்துரை கழுத்தில் அரிவாள் இறங்கியிருக்கும். சின்னத்துரைக்கும் அவர் தங்கைக்கும் உயர்தர நவீன சிகிச்சையை அரசே அளிக்கவேண்டும்.
மேலும் அவர்களின் கல்விக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அந்த பகுதியின் அத்தியாவசிய தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வழிவகை செய்யவேண்டும். கோயில் திருவிழாக்களில் பெருந்தெரு மக்கள் கலந்துகொள்ளுமாறு அரசு ஆவன செய்யவேண்டும். ஜாதிவெறி மாணவர்கள் ஒரு தேர்ந்த கூலிப்படை போல 2 அடி அரிவாளால் அந்த பிஞ்சுகள் மேல் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதலை பார்த்த அதிர்ச்சியில் 55 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
அவருக்கு இரண்டும் மகள்கள் ஒரு மகன். அந்த குடும்பம் தற்போது குடும்பத்தலைவரை இழந்துள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீடும். பட்டதாரி மகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இந்த விபரீதத்தை ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளும் தமிழ்நாடு அரசு பெருந்தெரு மக்களின் பிரச்சனைகளை களைந்து சமத்துவத்தை நிச்சயம் நிலைநாட்டும் என நம்புவோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க!











Click it and Unblock the Notifications