"இன்னொருத்தனா".. கழட்டி விட்ட காதலி.. எகிறிய இளைஞன்.. காலேஜ் வாசலிலேயே நடந்த அந்த சம்பவம்!

இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: "நான் இருக்கும்போது இன்னொருத்தனா" என்று கழட்டி விட்ட காதலியின் காதலியின் கழுத்தை அறுத்தேவிட்டார் இளைஞர்.. காலேஜ் வாசலிலேயே இப்படி ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. பெயர் பாலகிருஷ்ணன்... பாளையங்கோட்டையில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் காலேஜில் படித்து முடித்தவர்..

அதே காலேஜில் படித்துவரும் நெல்லை டவுனை சேர்ந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணும் இளைஞரை அதி தீவிரமாக காதலித்தார்.. ஒன்றரை வருட காதல் இது.. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டார்கள்.. காலேஜும் மூடப்பட்டுவிட்டது..

காதலி

காதலி

அதனால் 2 பேரும் சரியாக சந்தித்து பேச முடியாத சூழல் வந்தது.. நாள் ஆக ஆக, இவர்களுக்கு இடையில் இருந்த நெருக்கம் குறைந்தது.. உறவில் விரிசல் வந்தது. இது பாலகிருஷ்ணனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. போன் செய்தாலும் அந்த பெண் எடுப்பதில்லை.. அதனால் நேரடியாகவே காதலி வீட்டுக்கு சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்.. அதன்படி அவர் வீட்டிற்கும் சென்றார்.. ஆனால் வீட்டில் அந்த பெண்ணின் பெற்றோர் இருந்தனர்..

வார்னிங்

வார்னிங்

பாலகிருஷ்ணனை பார்த்ததுமே அவர்கள் கோபமாகி வார்ன் செய்து அனுப்பிவிட்டனர். இந்த சமயத்தில்தான், அந்த பெண் இன்னொரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, அதை பற்றி விசாரிப்பதற்காக, காதலியை தேடி மறுபடியும் அவர் வீட்டுக்கு சென்றார்..

கழுத்தறுப்பு

கழுத்தறுப்பு

ஆனால், அவர் வீட்டில் இல்லை, காலேஜ் சென்றுவிட்டதாக தெரிந்ததும், உடனே அங்குகிளம்பி சென்றார்.. காலேஜ் கேட்டில் செக்யூரிட்டி இருந்தும், உள்ளே அத்துமீறி சென்றுள்ளார்.. அந்த பெண்ணை சந்தித்து, கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதானா என்று கேட்டுள்ளார். ஆனால், காதலியோ பாலகிருஷ்ணனிடம் பேசவே விரும்பவில்லை.. தவிர்த்தார்.. இதனால் மேலும் ஆத்திரமுற்ற பாலகிருஷ்ணன், கையில் வைத்திருந்த சின்ன சைஸ் பிளேடு வைத்து, காதலியின் கழுத்தை அறுத்து விட்டார்..

சிகிச்சை

சிகிச்சை

இதில் தொண்டை பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது.. வலியால் அலறி துடிப்பதை பார்த்ததும் அங்கிருந்தோர் உடனடியாக மீட்டு அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தப்பி ஓட முயன்ற பாலகிருஷ்ணனையும் பிடித்து பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இப்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. அந்த பெண் இப்போது சீரியஸாக இருக்கிறாராம்.. சிகிச்சை நடந்து வருகிறது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+