Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்திலேயே அதிக வயதான நெல்லையப்பர் கோயில் யானை! 40 ஆண்டாக ஓடியாடிய காந்திமதிக்கு நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தது. இந்த யானைதான் தமிழகத்திலேயே அதிக வயதுடைய யானையாக கருதப்பட்டு வந்தது.

யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் கோயில் யானைகளிடம் ஆசி வாங்குவது என்பது அந்த கடவுளே ஆசி கொடுத்தது போல் ஆகும். இந்த யானைகள் கோயில் திருவிழாக்களின் போது அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

tirunelveli nellaiyappar

இதை பார்க்கும் போது பெரியவர்களும் குழந்தைகளை போல் குதூகலமாகிவிடுவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், புதுவை மணக்குல விநாயகர் கோயில்களில் எல்லாம் யானைகள் மக்களுடன் மக்களாகவே பழகி வருகின்றன.

இவை குழந்தையை போல் தலையாட்டியபடி நடப்பதும், செய்யும் சில சின்ன சேட்டைகளும் காண மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி இன்று காலை எல்லாம் வல்ல அந்த சிவனின் அடி சேர்ந்துவிட்டது.

யானையின் இறப்பை தாங்க முடியாத பாகனும் பொதுமக்கள் உடலை சுற்றி கதறி அழுகிறார்கள். இந்த யானைக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே காந்திமதி யானை மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்ததாம்.

இதற்கு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு படுத்து தூங்கிய காந்திமதி அதிகாலை பாகன் வந்து எழுப்பிய போது நடக்க முடியாமல் போனது. அவர் எவ்வளவு முயற்சித்தும் அந்த யானையால் எழ முடியவில்லை.

இதையடுத்து கால்நடை மருத்துவர்களும் வனத்துறை மருத்துவர்களும் கோயிலுக்கு வந்து கிரேன் மூலம் காந்திமதி யானையை தூக்கி நிற்க வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அதற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இந்த யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் யானையும் ஒன்று. தென் தமிழகத்திற்கு சுற்றுலா செல்வோரும் நெல்லையப்பரை வணங்கிவிட்டு அங்குள்ள கடைகளில் அல்வா வாங்கி வருவார்கள். அது போல் சபரிமலை செல்வோரும் இந்த தலத்திற்கு வருகை தருகிறார்கள்.

கடந்த 1985 ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் யானை ஒன்று நெல்லையப்பர் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அப்போது அந்த யானைக்கு 16 வயது இருந்தது. பெண் யானை என்பதால் இதற்கு நெல்லையப்பர் கோயிலின் அம்பாள் பெயரான காந்திமதி என பெயர் சூட்டப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளாக நெல்லை பகுதி மக்களுடன் ஒன்றியிருந்த இந்த யானையின் இறப்பால் அப்பகுதி மக்கள் கதறி அழுகிறார்கள். மேலும் தமிழகத்திலேயே அதிக வயதான யானையாக காந்திமதி கருதப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து இருவர் பலியானதை அடுத்து நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த யானை வேலிகளால் ஆன ஒரு இடத்தில் போட்டு அடைக்கப்பட்டிருந்தது. அதற்கு வேளா வேளைக்கு உணவு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+