அரசியல் தலைவர்களின் படங்களை கண்டதும் அகற்ற உத்தரவு.. களை கட்டும் தேர்தல் திருவிழா
நெல்லை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் கொடிகள், தலைவர் படங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டதைத்தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. அரசு இயந்திரங்கள் தங்களது பணியை முடுக்கிவிட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள், உத்தரவுகள் உடனடி செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தென்காசி பாராளுமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை க்கூட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புளியங்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் தங்கராஜ், செங்கோட்டை வட்டாட்சியர் வெங்கடேசன் கடையநல்லூர், செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், அச்சன்புதூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர்கள் ஷியாம் சுந்தர், சங்கர், மாரீஸ்வரி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பேசும்போது, ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சிக்களின் கொடிக்கம்பங்களை அகற்றுதல்,அரசியல் சம்பந்தபட்ட விளம்பர போர்டுகளை கோவில் திருவிழா, திருமண, சடங்கு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதனை கண்டால் அகற்றவேண்டும். சுவர்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை காவல்துறையினருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் தெளிவுப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications