Pongal 2025: என்னாது கணவன்- மனைவி வாயோடு வாய் வைத்து..? பொங்கலுக்கு வித்தியாசமான போட்டி
நெல்லை: பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் தம்பதிகளுக்காக நடத்தப்பட்ட வித்தியமாசமான விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அது போல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது.

இந்த நிலையில் நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தம்பதிகளுக்காக வித்தியாசமான விளையாட்டு போட்டி ஒன்று நடந்தது.
ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் தம்பதிகள் தங்களது வாயில் பந்துகளை வைத்து கீழே விழாமல் பத்திரமாக கொண்டு போய் மறுமுனையில் சேர்க்கும் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் அதிக பந்துகளை சேர்த்து வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது. அது போல் சில இடங்களில் மனைவியை தூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜென்டில்மேன் படத்தில் செந்தில் அப்பளம் போடும் பெண்களுடன் சப்லிங், டிக்கிலோனா, கப்லிங் விளையாடுவார். அதாவது ஒரு கம்பியில் திராட்சை பழங்கள் சொருகி இருக்கும். அதில் இருபுறமும் ஒவ்வொருவராக சப்பி சப்பி எடுக்க வேண்டும் என்பார்.
அது போல் கப்லிங் என ஒரு விளையாட்டை சொல்வார். இருவரும் வாயில் ஸ்பூன் வைத்துக் கொண்டு எலுமிச்சை பழத்தை எதிரில் இருப்போர் ஸ்பூனில் வைத்தால் ஒரு கோல் என்பார். அப்போது கவுண்டமணி, "என்னை விளையாடு" என சொல்லிவிட்டு அடுப்பில் ஸ்பூனின் முனையை சூடாக்கி செந்தில் வாயில் வைத்துவிடுவார். இது பயங்கர காமெடியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications