முடியல சார்.. ஹெலிகாப்டரே கைவிரித்த சோகம்! கண்முன் விழுந்த பாறைகள்.. நெல்லை குவாரியில் என்ன நடந்தது?
திருநெல்வேலி: திருநெல்வேலி குவாரி விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்ட போதும் கூட உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்க முடியவில்லை.
Recommended Video
திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்திலுள்ள அந்த தனியார் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டது. பாறைகள் திடீரென உடைந்து குவாரி உள்ளே விழுந்ததில் கொடூரமான விபத்து ஏற்பட்டது.
300 அடி ஆழத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த 6 பேர் இந்த விபத்தில் சிக்கினார்கள். இதுவரை 2 பேர் இங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 3 பேரை மீட்கும் போராட்டம் நடந்து வருகிறது.

குவாரி
இந்த நிலையில் குவாரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்ட போதும் கூட உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்க முடியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி உள்ளே இறங்கி, ஊழியர்களை அதில் கட்டி தூக்கலாம் என்ற முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக ராமேஸ்வரம் ஐஎன்எஸ் பருந்துபடை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது.

ஹெலிகாப்டர்
ஆனால் ஹெலிகாப்டர் மூலம் கீழே சிக்கி இருந்தவர்களை மீட்க முடியவில்லை. பாறைகள் பெரிதாக இருந்ததால் அதை ஹெலிகாப்டர் வைத்து அகற்ற முடியவில்லை. பாறைகளை அகற்றினால்தான் உள்ளே இருப்பவர்களை தூக்க முடியும். இதனால் ஹெலிகாப்டர் வந்தும் பயன் அளிக்கவில்லை. இதையடுத்து மீட்பு பணிகளை செய்ய முடியாததால் ஹெலிகாப்டர் திரும்பி சென்றது.

நெல்லை குவாரி
இதையடுத்து நெல்லை குவாரி விபத்தில் 300 அடி பள்ளம் என்பதால் ஊழியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் நேற்று மீட்பு பணிகள் செய்யப்படவில்லை. அதோடு சரியாக நேற்று மீட்பு பணிகள் செய்யும் நேரத்தில் கண் முன்னே பாறைகள் விழுந்தன. இதனால் உள்ளே இருந்த அதிகாரிகள் அலறி அடித்து ஓடினர். இதனால் தற்காலிகமாக நேற்று மாலையில் இருந்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

மேலாண்மை அதிகாரிகள்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று குவாரிக்கு வருகிறார்கள். அவர்கள் மூலம் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் ஆழம் தோண்டப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 90 அடி வரை தோண்ட அனுமதி பெற்றுவிட்டு 300 அடிக்கும் கீழே தோண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விபத்திற்கு காரணம்
இதுவே விபத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது வரை நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது முன்னிர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான அனுமதி இன்றி குவாரி பணிகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications