புறம்போக்கு நிலம்.. பட்டா மாற்ற ரூ.10 லட்சம்.. மலைத்த மதுரை நபர்.. நெல்லை வளர்மதியை வளைத்த ஆபீசர்ஸ்
திருநெல்வேலி: மதுரையைச் சேர்ந்தவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் என்று சொல்லி பண மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த தலைமைக் காவலரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ்.. 41 வயதாகிறது.. இவர் திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சந்திப்பு போலீஸ் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ளது. அங்கு தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வளர்மதி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு, வளர்மதி என்ற பெண் முருகராஜுக்கு பழக்கமானார்.. வளர்மதிக்கு 40 வயதாகிறது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர்.. ஒருகட்டத்தில் வளர்மதியும், முருகராஜூம் நெருக்கமானார்கள்.. பிறகு வளர்மதிக்காகவே, நெல்லையிலேயே வாடகைக்கு வீடும் எடுத்து கொடுத்துள்ளார் முருகராஜ்.
ஆனால், முருகராஜூக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. இதற்காக வளர்மதியை கருவியாக பயன்படுத்த முடிவு செய்தார்... அதன்படி, தன்னை ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் என்று பலரிடம் சொல்லி, பண மோசடியில் இறங்கினார் வளர்மதி.. நிலத்துக்கு பட்டா வாங்கி தருவதற்கும், அரசு வேலை வாங்கித்தருவதற்கும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார்.. பணம் அதிகமாக புழங்கவும், இந்த மோசடியையே அதிகமாக செய்து வந்திருக்கிறது இந்த கள்ளக்காதல் ஜோடி.
புறம்போக்கு நிலம்: இந்த மோசடியில் இவர்களிடம் சிக்கியவர்கள்தான், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சசிகுமார்.. 40 வயதாகிறது.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கி தர வேண்டும் என்பதற்காக வளர்மதியை அணுகியிருக்கிறார்..
இதற்கு வளர்மதி, ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டாராம்.... ஆனால் பல மாதங்கள் ஆகியும் பட்டா வாங்கி தராமல் இருந்துள்ளார்.. எனவே, தான் கொடுத்த பணத்தை வளர்மதியிடம் கேட்டுள்ளார் சசிகுமார்.. பணத்தையும் தராமல் இருந்துள்ளார் வளர்மதி.. இதனால், முருகராஜிடம் விஷயத்தை சொல்லி புலம்பியிருக்கிறார் சசிகுமார்... உடனே முருகராஜ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சசிகுமாருக்கு தந்துள்ளார்.. ஆனால், அது பவுன்ஸ் ஆகி திரும்பிவந்துவிடடது.
அம்பலம்: இதற்கு பிறகுதான், இந்த 2 பேர்மீதும் சசிக்குமாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. எனவே வளர்மதி குறித்து விசாரிக்க விசாரித்தபோது, அவர் மாவட்ட வருவாய் அலுவலர் என்பது வெட் வெளிச்சமானது.
ஹெட் கான்ஸ்டபிள் முருகராஜுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் உறுதியானது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிக்குமார், சந்திப்பு போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில், வளர்மதி மற்றும் முருகராஜ் இருவரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது.. இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறது. இவர்களிடம் ஏமாந்தவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை போலீஸார் தயாரித்து கொண்டிருக்கிறார்களாம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications