Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புறம்போக்கு நிலம்.. பட்டா மாற்ற ரூ.10 லட்சம்.. மலைத்த மதுரை நபர்.. நெல்லை வளர்மதியை வளைத்த ஆபீசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: மதுரையைச் சேர்ந்தவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் என்று சொல்லி பண மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த தலைமைக் காவலரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ்.. 41 வயதாகிறது.. இவர் திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சந்திப்பு போலீஸ் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ளது. அங்கு தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

squatter lands patta land nellai

வளர்மதி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு, வளர்மதி என்ற பெண் முருகராஜுக்கு பழக்கமானார்.. வளர்மதிக்கு 40 வயதாகிறது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர்.. ஒருகட்டத்தில் வளர்மதியும், முருகராஜூம் நெருக்கமானார்கள்.. பிறகு வளர்மதிக்காகவே, நெல்லையிலேயே வாடகைக்கு வீடும் எடுத்து கொடுத்துள்ளார் முருகராஜ்.

ஆனால், முருகராஜூக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. இதற்காக வளர்மதியை கருவியாக பயன்படுத்த முடிவு செய்தார்... அதன்படி, தன்னை ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் என்று பலரிடம் சொல்லி, பண மோசடியில் இறங்கினார் வளர்மதி.. நிலத்துக்கு பட்டா வாங்கி தருவதற்கும், அரசு வேலை வாங்கித்தருவதற்கும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார்.. பணம் அதிகமாக புழங்கவும், இந்த மோசடியையே அதிகமாக செய்து வந்திருக்கிறது இந்த கள்ளக்காதல் ஜோடி.

புறம்போக்கு நிலம்: இந்த மோசடியில் இவர்களிடம் சிக்கியவர்கள்தான், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சசிகுமார்.. 40 வயதாகிறது.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கி தர வேண்டும் என்பதற்காக வளர்மதியை அணுகியிருக்கிறார்..

இதற்கு வளர்மதி, ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டாராம்.... ஆனால் பல மாதங்கள் ஆகியும் பட்டா வாங்கி தராமல் இருந்துள்ளார்.. எனவே, தான் கொடுத்த பணத்தை வளர்மதியிடம் கேட்டுள்ளார் சசிகுமார்.. பணத்தையும் தராமல் இருந்துள்ளார் வளர்மதி.. இதனால், முருகராஜிடம் விஷயத்தை சொல்லி புலம்பியிருக்கிறார் சசிகுமார்... உடனே முருகராஜ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சசிகுமாருக்கு தந்துள்ளார்.. ஆனால், அது பவுன்ஸ் ஆகி திரும்பிவந்துவிடடது.

அம்பலம்:
இதற்கு பிறகுதான், இந்த 2 பேர்மீதும் சசிக்குமாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. எனவே வளர்மதி குறித்து விசாரிக்க விசாரித்தபோது, அவர் மாவட்ட வருவாய் அலுவலர் என்பது வெட் வெளிச்சமானது.

ஹெட் கான்ஸ்டபிள் முருகராஜுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் உறுதியானது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிக்குமார், சந்திப்பு போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில், வளர்மதி மற்றும் முருகராஜ் இருவரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது.. இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறது. இவர்களிடம் ஏமாந்தவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை போலீஸார் தயாரித்து கொண்டிருக்கிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+