நெல்லை, குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த பாஜக தூது விட்டது… டிடிவி தினகரன் பேச்சு
நெல்லை: கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு பொன். ராதாகிருஷ்ணன் தூது விட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு பெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

மாநிலம் முழுவதும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை, கன்னியாகுமரியில் சிறுபான்மையினரை வேட்பாளராக நிறுத்துமாறு பாஜகவினர் நிர்ப்பந்தம் செய்ததாகக் கூறினார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தங்களை தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாருடன் கூட்டணி வைக்க கூடாது என்று ஜெயலலிதா கூறினார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறுகிறார்கள் என்றும் பேசினார் மே 23-ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி ஆட்சியை மக்கள் முடித்து விடுவார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார். இந்தத் தேர்தலை விட்டால் நல்ல வாய்ப்பு இல்லை என்றும் இல்லாவிட்டால் மோடி தமிழ்நாட்டை தத்தளிக்க விட்டு விடுவார் எனவும் அவர் விமர்சனம் செய்தார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications