Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் காசு வைக்காமல் எதற்கு இத்தனை கேமரா.. கடிதம் எழுதிய திருடன் யார்? தீவிரமாக தேடும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம்.. காசு வைக்காமல் எதற்கு இத்தனை கேமரா.. போங்கடா வெண்ணைகளா, என்னை மன்னித்து விடுங்கள்.. இப்படிக்கு திருடன் என்று நெல்லையில் ஒரு வீட்டில் திருடப்போன திருடன் தனது ஏமாற்றத்தை வெளிப்படையாக கடிதம் மூலம் எழுதிவைத்துள்ளார். அத்துடன் போகும் போது சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்குகளை திருடி சென்றுள்ளார்.

திருடர்கள் சிலர், வீடுகளில் திருட போகும் போது, வடிவேலு சினிமா பட பாணியில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சாப்பிட்ட திருடர்கள், சாப்பிட்ட காரணத்தாலேயே சிக்கியும் இருக்கிறார்கள். அதேபோல் சில திருடர்கள் மது அருந்திவிட்டு திருட செல்வார்கள் அப்படி செல்லும் போது, திருடி பின்னர், அசதியில் அங்கேயே தூக்கியிருக்கிறார்கள். சில திருடர்கள் போதையில் மயங்கியும் விழுந்து மாட்டியிருக்கிறார்கள்.

Thief from Tirunelveli writes letter stating that there is not even a single rupee in Nellai s house

இன்னும் சில திருடர்கள் மிக நேர்மையாக பொருட்களை திருடிய மறுநாளே ஒப்படைத்துவிட்டு சென்றதும் நடந்துள்ளது. சிலர் திருடிய வீட்டின் வாசலில் வந்து பொருளை வைத்துவிட்டு செல்வதும் நடந்திருக்கிறது. சில திருடர்கள் திருடப்போன வீட்டில் பொருள் இல்லாமல் போனால் ஏமாற்றத்தை சந்திப்பதுடன், அதனை கடிதமாகவும் எழுதிவைப்பார்கள். அப்படியான சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

நெல்லை பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட் என்பவர் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக மதுரைக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். அப்போது வீட்டை உடைத்து வீட்டிற்குள் வந்த மரமானவர்கள் வீட்டிலிருந்த பீரோ மற்றும் பொருட்களை உடைத்து நகை பணம் உள்ளதா என்று தேடிப் பார்த்துள்ளார்கள். அப்போது வீட்டில் இருந்த உண்டியலை திருடி சென்றுள்ளனர். கடைசியாக வீட்டு உரிமையாளருக்கு திருடன் ஒரு நான்கு பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு சென்றார்.

‌அந்த கடிதத்தில், வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம்.. காசு வைக்கவும் "காசு இல்லை.. எதற்கு இத்தனை கேமரா. போங்கடா வெண்ணைகளா என்னை மன்னித்து விடுங்கள், இப்படிக்கு திருடன்‌ என எழுதி வைத்த சம்பவம் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கையும் திருடன் திருடிச் சென்றுள்ளார் இந்த சம்பவம் குறித்து நெல்லை பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+