Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு சனாதன தர்மமே காரணம்.. திருமாவளவன் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஆணவ படுகொலைகளுக்கு சனாதன தர்மமே காரணம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தின் அடிப்படையில் சாதி மாறி காதலித்தவர்களைப் படுகொலை செய்தனர் என்று கூறியுள்ள திருமாவளவன், சாதி விட்டு சாதி திருமணம் செய்வது குற்றம் என்று மனுதர்மம் சொல்வதாகவும் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்திற்கு தெரிய வர, கவினை நேரில் பேச அழைத்துள்ளார்.

Thirumavalavan Blames Sanatana Dharma for Honour Killings in Tamil Nadu

அப்போது கவினை வெட்டிப் படுகொலை செய்த சுர்ஜித், நேராகக் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இவரின் பெற்றோர் இருவருமே காவல் உதவி ஆய்வாளர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சுர்ஜித்தின் உடலை பெற்று கொள்ள அவரின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விசிக சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாட்டில் திராவிடத்தை எதிர்க்கக் கூடிய நபர்களால் தான் சாதிப் பெருமை உயர்த்தி பிடிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சாதிய ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருகிறது.

சங்பரிவார் கும்பலுடன் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள் என தொடர்ந்து சொல்லி வருவது வருங்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்த்து கொள்வதற்காகத்தான். ஆணவ படுகொலைகளுக்குக் காரணமே சனாதன தர்மம் தான். சனாதன தர்மத்தின் அடிப்படையில் சாதி மாறி காதலித்தவர்களைப் படுகொலை செய்தனர். சாதி விட்டுச் சாதி திருமணம் செய்வது குற்றம் என்று மனுதர்மம் சொல்கிறது.

சங்கப் பரிவார் அமைப்புகளை வளர்த்துவிட்டால் நாளுக்கு ஒரு ஆணவ படுகொலை விழும். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் வன்முறைகள் உத்திர பிரதேசம், பீகாரை போலத் தமிழகத்திலும் வெறியாட்டம் போடும். இந்தியா முழுவதும் சனாதன அரசியல் தகர்த்தெறியப்பட வேண்டும் அப்போதுதான் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. ஒரே சாதியில் திருமணம் செய்வதை அரசியலமைப்பு சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இன்றும் நடைமுறையில் இருப்பது சனாதன தர்மம் தான். அரசியலமைப்பு சட்டம் அல்ல. ஆணவ படுகொலைகளுக்கு ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகள் தான் காரணம் என சொல்லிவிட்டு நகர்ந்து விட முடியாது.

யார் முதலமைச்சராக இருந்தாலும் தடுக்க முடியாது. நானே முதல்வரானால் கூட சாதிய வன்கொடுமைகளையும் ஆணவக் கொலைகளையும் கட்டுப்படுத்தி விட முடியாது, சமூகத்தில் இது போன்ற செயல்கள் தவறு என்பதைச் சொல்வதற்கான விழிப்புணர்வு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை சொல்வதற்கு ஆட்கள் இல்லை.

அதனால்தான் மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வரத் தயங்குகிறது. சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் போன்று ஆணவக் கொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தமிழக அரசிடம் கருத்துக் கேட்டது. இதனால் வரை தமிழகத்தில் இருந்த எந்த அரசும் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.

ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வந்தால் தலித் அல்லாத நபர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என அச்சம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பாப்பாபட்டி கீரிப்பட்டி பகுதிகளில் தலித்துகள் ஊராட்சி மன்ற தலைவராக வருவதை எதிர்த்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தித் தேர்தலை திமுக அரசு நடத்தியது.அந்த துணிச்சலோடு ஆணவ படுகொலைகளைத் தடுப்பதற்குச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+