நெல்லையில் சிக்கும் க்ளூ? காங். ஜெயக்குமார் வீட்டுக்கே போக போறாங்க! சிபிஐ-யால் திருநெல்வேலியில் பரபர
திருநெல்வேலி: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான விசாரணை அவரது குடும்பத்தினரிடம் இன்று ஆரம்பமாகிறது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங்.. 60 வயதாகிறது.. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 2ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டர்..

மர்மம்: இதையடுத்து, தேடப்பட்ட சம்பவத்தில், கடந்த 4ம் தேதி, வீட்டை ஒட்டியிருக்கும் தோட்டத்திலேயே ஜெயக்குமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.
இதையடுத்து, போலீசாரின் விசாரணை ஆரம்பமானது.. ஜெயக்குமார் எழுதி வைத்ததாக சொல்லப்படும் நபர்கள் குறித்து குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. ஆனாலும், இதுவரை எந்தவிதமான துப்பும் இதில் கிடைக்கவில்லை..
எதிர்க்கட்சிகள்: இதற்கு நடுவே எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தன. "ஜெயக்குமார் தனசிங்கின் கார் அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது. அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். எனவே, இதுகுறித்த உண்மையை வெளிக்கொரண வேண்டுமானால், சிபிஐ வசம் வழக்கை ஒப்படையுங்கள்" என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து, தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், ஜெயக்குமார் மர்ம மரணம் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வழக்கின் எப்ஐஆர் ரிப்போர்ட், ஜெயக்குமாரின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது..
ஆய்வு: சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி இதுகுறித்து மர்ம மரணம் என (குற்ற எண் 2/2024) வழக்குப்பதிந்துள்ளார். முதற்கட்டமாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பிகள் சிவகுமார், ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோரது தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் கரைசுத்துப்புதூர் நேற்றைய தினம் சென்று அவரது உடல் கிடந்த தோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
தடயவியல் துறையினரும் வந்து ஏற்கனவே சிக்கிய தடயங்கள் குறித்து விளக்கமளித்தனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்ததால், பல இடங்களில் மண் நிரம்பியிருந்தது. அதனால், மண்வெட்டியால் தோண்டி பார்த்தார்கள்.. கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதி, வீடு, வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதிகளையும் பார்வையிட்டார்கள்.. வி.ஏ.ஓ உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது..
இன்று விசாரணை: இந்நிலையில், இன்றைய தினம், ஜெயக்குமாரின் தோட்ட காவலாளி முருகன், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த போகிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஜெயக்குமாரின் மரண வாக்குமூல கடிதங்களில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி, மறுபடியும் அவர்களை திட்டமிட்டிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications