Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விதைப்பையை நசுக்கியது..பல்லை பிடுங்கிய விவகாரம்.. பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்கள் பற்களை இழந்து வீடு திரும்பினர். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணையின் போது பற்களை குறடு உள்ளிட்ட ஆயுதங்களால் பிடுங்கி எறிந்து சித்ரவதை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Tirunelveli District Crime Branch registered FIR against suspended Ambasamudram ASP Balveer Singh IPS

அத்துடன் இது தொடர்பான விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர் விசாரணையை முடித்துக் கொண்டு சென்னை கிளம்பினார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tirunelveli District Crime Branch registered FIR against suspended Ambasamudram ASP Balveer Singh IPS

முன்னதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் 40க்கும் மேற்பட்டோரின் பல்லை உடைத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சார் ஆட்சியர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அதில் சூர்யா மட்டும் திடீரென பல்டி அடித்து போலீஸ் அதிகாரி தனது பல்லை உடைக்கவில்லை, கீழே விழுந்து தான் பல் உடைந்ததாக பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+