விதைப்பையை நசுக்கியது..பல்லை பிடுங்கிய விவகாரம்.. பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு
திருநெல்வேலி: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்கள் பற்களை இழந்து வீடு திரும்பினர். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணையின் போது பற்களை குறடு உள்ளிட்ட ஆயுதங்களால் பிடுங்கி எறிந்து சித்ரவதை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அத்துடன் இது தொடர்பான விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர் விசாரணையை முடித்துக் கொண்டு சென்னை கிளம்பினார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் 40க்கும் மேற்பட்டோரின் பல்லை உடைத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சார் ஆட்சியர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அதில் சூர்யா மட்டும் திடீரென பல்டி அடித்து போலீஸ் அதிகாரி தனது பல்லை உடைக்கவில்லை, கீழே விழுந்து தான் பல் உடைந்ததாக பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications