Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அது" கிட்டயே ராத்திரியெல்லாம் நின்னுட்டு இருந்தாராம்.. நெல்லை காட்டுக்கு மகளை அழைத்து போன அப்பா.. ஆ

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் தன் மகளின் நடத்தையை கண்டு கொந்தளித்து விட்டார் பெற்ற தந்தை.. இப்போது ஒரு உயிரே பறிபோய்விட்டது.

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ளது நடுவக்குறிச்சி என்ற பகுதி.. இங்கு வசித்து வருகிறார் கொம்பையா... இவர் ஒரு கட்டட தொழிலாளி ஆவார்.. மனைவி பெயர் முத்துப்பேச்சி. 12 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

Tirunelveli incident and Do you know why did Nellai Father take this sudden decision about his Daughter Muthupechi

தம்பதி: இந்நிலையில், கணவன் மனைவி இடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே தகராறு இருந்தது.. எனவே, முத்துப்பேச்சி கணவருடன் கோபித்துக் கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.

நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் உள்ள ஒரு நகரில், முத்துப்பேச்சியின் பெற்றோர் வசித்து வருகிறார்கள்.. முத்துப்பேச்சியின் அப்பா மாரியப்பன், பாளையங்கோட்டையில் இளநீர் கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.

பெற்றோர்: அம்மா வீட்டுக்கு வந்த முத்துபேச்சி, தன்னுடைய சொந்தக்காரர் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.. இந்த விஷயம் தெரிந்து மாரியப்பன், தன்னுடைய மகளை கண்டித்துள்ளார்.. ஆனாலும் முத்துபேச்சி, எதையும் காதில் வாங்காமல், கள்ளக்காதலை வளர்த்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கொந்தளித்துபோன தந்தை மகளை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்து, மேலப்பாட்டத்ததில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லி, நேற்றிரவு முத்துப்பேச்சியை தன்னுடைய பைக்கில் அழைத்து வந்துள்ளார்.. பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கை ஓட்டிவந்து நிறுத்தினார்.

இளநீர்: பைக்கிலிருந்து இளநீர் வெட்டும் அரிவாளை வெளியே எடுத்த மாரியப்பன், தன்னுடைய மகள் முத்துபேச்சியை வெட்ட போனார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துப்பேச்சி, சுதாரித்துக் கொண்டு, அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினார்..

ஆனாலும் மாரியப்பன் விடவில்லை.. பின்னாடியே அரிவாளுடன் ஓடிச்சென்று, மகளின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.. இதற்கு பிறகு, பாளையங்கோட்டை தாலுகா போலீசுக்கும் அவரே தகவலை சொன்னதாக தெரிகிறது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தால், மகள் முத்துபேச்சியை கொலை செய்துவிட்டு, அங்கேயே பக்கத்திலேயே நின்றிருந்தாராம் மாரியப்பன்.

போஸ்ட் மார்ட்டம்: பிறகு முத்துபேச்சியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பனையும் அவரை கைது செய்து போலீசார் அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். போலீசாரிடம் வாக்குமூலத்தில் அனைத்தையும் சொல்லி உள்ளார் மாரிமுத்து.. இப்போது, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+