யாரை டிக்கெட் எடுக்க சொல்றே.. கண்டக்டர் முகத்திலேயே குத்தி தாக்கிய 2 போலீஸார்.. பகீர் வீடியோ
அரசு பஸ் கண்டக்டரை 2 போலீஸ்காரர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்
Recommended Video
நெல்லை: "யாரை பார்த்து டிக்கெட் எடுக்க சொல்றே" என்று அரசு பஸ் கண்டக்டரை 2 போலீஸ்காரர்கள் தாறுமாறாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டதற்கு, போலீஸ்காரர் ஒருவர் கண்டக்டருடன் தகராறு செய்தார். இதனால் 10 கிமீ தூரத்துக்கு கத்தி கத்தி உயிரையே விட்டார் அந்த கண்டக்டர். இப்போது திரும்பவும் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
நெல்லை புது பஸ் ஸ்டேண்ட்டில் குமுளியிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில், ஆயுதப்படைக் காவலர்களான தமிழரசன், மகேஷ் ஆகிய 2 பேரும் ஏறியுள்ளனர். இருவருமே யூனிபார்மில்தான் இருந்தனர்.

வாரண்ட்
எனினும் கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்க சொன்னார். அதற்கு அவர்கள் இருவரும், "நாங்க எதுக்கு டிக்கெட் எடுக்கணும். எங்ககிட்ட இருக்கு.. அதனால டிக்கெட் எடுக்க மாட்டோம்" என்று சொல்லி உள்ளனர்.

வாக்குவாதம்
இதனால் கண்டக்டர், "சரி வாரண்ட்டை எடுத்து காட்டுங்கள்" என்றார். ஆனால் 2 போலீசாரும் அதற்கு மறுத்துள்ளனர். இது கொஞ்ச நேரத்தில் காரசார வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஒரு போலீஸ்காரர், சப்பென கண்டக்டர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதை கண்டக்டர் உட்பட பஸ்ஸில் இருந்த பயணிகளும் எதிர்பார்க்கவில்லை.

சரமாரி அடி
கண்டக்டர் வாரண்ட்தானே கேட்டார், அதை தர வேண்டியதுதானே என்று சக பயணிகள் கூச்சலிட்டனர். திரும்பவும் 2 போலீஸ்காரர்களும் சேர்ந்து கண்டக்டரை தாறுமாறாக அடித்தனர். அப்போதும் கண்டக்டர், "நான் வாரண்டைத்தானே காட்ட சொன்னேன், என்னை எப்படி அடிக்கலாம்? என்னை ஏன் வாடா போடான்னு சொல்றீங்க?" என்று சொல்லிவிட்டு, டிரைவரிடம் வண்டியை போலீஸ் ஸ்டேஷன் விடுமாறு சொன்னார்.

ரத்தம்
உடனே அந்த 2 போலீஸ்காரர்களும் "எஸ்பி ஆபீசுக்கே வண்டியை விடுங்க.. பார்ப்போம்" என்றனர். 2 போலீசாரும் அடித்ததில், கண்டக்டருக்கு முகம், தலை, நெத்தியெல்லாம் ரத்தம் வழிய ஆரம்பித்துவிட்டது. இதை பஸ்ஸில் இருந்தவர்களும் வீடியோ எடுத்துவிட்டனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் பக்கத்தில் இருந்த மூன்றடைப்பு போலீஸ் ஸ்டேஷனில் பஸ் நிறுத்தப்பட்டது. கண்டக்டரும், டிரைவரும் 2 போலீசார் தாக்கியதாக புகார் அளித்தனர்.

ஜாமீன்
இதை தொடர்ந்து காயமடைந்த கண்டக்டர் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கண்டக்டர் தந்த புகாரின் பேரில் 2 போலீசாரும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில்இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கண்டக்டரை 2 போலீஸ்காரரும் தாக்கிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications