திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ரத்தம் சொட்ட சொட்ட கடிதம்".. கொடுமை செய்த மருமகள்.. துணை போன மகன்.. அப்பா - அம்மாவின் விபரீத முடிவு

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரியில் குடும்ப பிரச்சினை காரணமாக வயதான தம்பதியினர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலை முயற்சியில் மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது கணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டில் மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

'4 கட்டம்’ 22ஆம் தேதி என்ன நடக்குதுனு பாருங்க! திடீரென களத்தில் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! '4 கட்டம்’ 22ஆம் தேதி என்ன நடக்குதுனு பாருங்க! திடீரென களத்தில் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

தகராறு

தகராறு

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள பரதர் உவரி அந்தோணியார் கோயிலுக்கு வயதான தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்ததாகவும், இதில் மனைவி உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கணவர் அதே கத்தியை கொண்டு தனது கழுத்தையும் அறுத்து கொண்டார்.

விசாரணை

விசாரணை

இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியின் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை விசாரணையை தொடங்கியது. முதற்கட்டமாக இந்த தம்பதியினர் கொண்டு வந்திருந்த உடமைகளை பரிசோதித்தனர்.

தற்கொலை

தற்கொலை

அவர்கள் கொண்டுவந்திருந்த பையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த தம்பதியினர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த அந்தோணி பிச்சை, ஜெயலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் மகன் மற்றும் மருமகள் தொல்லை தாங்காததால் அந்தோணியார் கோயிலுக்கு வந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்ததாகவும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளனர்.

 மகன், மருமகள் தொல்லை

மகன், மருமகள் தொல்லை

முன்னதாக வாக்குவாதத்தில் மனைவியை கொலை செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் கடிதம் இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வயதான தம்பதியின் மகனிடம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். சுமார் 65 வயது மதிக்கத்தக்க வயதான தம்பதியினர் மகன்/மருமகள் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The incident of an elderly couple trying to commit suicide due to family problems in Uvari of Tirunelveli district has caused great shock. While the elderly woman died in this suicide attempt, her husband is undergoing treatment in a critical condition. The police have intensified the investigation as it has been reported that the son and daughter-in-law were bullying at home and therefore tried to commit suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X