திருத்தணி அருகே சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி.. 4 வயது குழந்தை பரிதாபமாக பலி
திருவள்ளூர்: குழந்தைகளுக்கு மாத்திரை, மிட்டாய் போன்றவற்றை கொடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். திருத்தணி அருகே காய்ச்சலுக்காக மாத்திரை கொடுக்கப்பட்ட நிலையில், தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எந்தப் பொருள்களை எடுத்தாலும் முதலில் வாயில் வைக்கும் பழக்கம் தான் இருக்கும். விளையாட்டு சாமான்கள், கோலிகுண்டு, தைல டப்பாக்கள் போன்ற சிறிய பொருள்களை குழந்தைகள் விழுங்கி விடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்திவிடும்.

இந்நிலையில், திருத்தணி அருகே காய்ச்சலுக்காக குழந்தைக்கு மாத்திரை கொடுக்கப்பட்ட நிலையில், தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலுக்காக குழந்தைக்கு பாதி மாத்திரையை தாய் அளித்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பிஆர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேலு, சசிகலா தம்பதி. நெசவுத் தொழிலாளி. இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று நள்ளிரவில் 4 வயது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையின் தாய் காய்ச்சலுக்காக மாத்திரையை பாதியாக உடைத்து கொடுத்துள்ளார்.
அப்போது, அந்த மாத்திரை குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியுள்ளது. இதில், அந்தக் குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு மிருதுவான பொருட்களை கொடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு மாத்திரையை அப்படியே கொடுக்காமல் பொடியாக மாற்றி குழைத்து கொடுப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications