மாஃபா பாண்டியராஜன் பங்கேற்ற பிரியாணி விருந்து... கேள்விக்குறியான சமூக இடைவெளி..!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முககவசம் அணிந்து பொதுவிடங்களுக்கு செல்ல வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை சுகாதாரத்துறை தொடர்ந்து முன் வைத்து வருகிறது.

பொதுமக்களில் பெரும்பாலானோர் இவற்றை கடைபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மட்டும் இதற்கு விதிவிலக்காகவே இருந்து வருகின்றனர். சமூக இடைவெளி என்பதை கேலிக்கூத்தாக்கும் வகையிலேயே அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என பேசியிருந்தார். அவ்வாறு அவர் அங்கு பேசிய நிகழ்ச்சியலேயே விருந்துக்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல் சமூக இடைவெளியை கேள்விக்குள்ளாக்கியது.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள நிலையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும் தான் அரசியல்வாதிகளின் அடையாளமோ..!
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!











Click it and Unblock the Notifications