சென்னை அருகே பகீர்.. சரக்கு ரயில் மீது மோதிய மைசூர் தர்பாங்கா எக்ஸ்பிரஸ்! தீப்பிடித்த பெட்டிகள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூரு தர்பாங்கா பயணிகள் விரைவு வரையிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ரயில்கள் மோதிய வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருவதால் உள்ளூர் மக்களும் தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலம் மைசூர் நோக்கி மைசூர் தர்பங்கா ரயில் சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

சரக்கு ரயில் மீது மோதிய வேகத்தில் இரண்டு ரயில் பெட்டிகள் தரம் புரண்டதாக கூறப்படுகிறது. மேலும் ரயிலில் திடீரென தீப்பற்றி நிலையில் பயணிகள் ரயிலில் இருந்து அலறி அடித்தபடி வெளியேறினர்.
இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்ப பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தகவல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகளும் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் திருவள்ளூரில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து இருக்கின்றனர்.
மேலும் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால் அங்கிருந்து காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து ரயில்வே துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications