பேசி நல்ல முடிவை எடுங்க.. ஆசிரியர் பகவானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கிய போலீஸ்!
Recommended Video
திருவள்ளூர்: நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த விவகாரத்தில் ஆசிரியர் பகவானுக்கும் பெண் வீட்டாருக்கும் போலீசார் 10 நாள் அவகாசம் விதித்துள்ளனர்.
திருவள்ளூர் வெள்ளியகரம் அரசுப்பள்ளி ஆசிரியரான பகவான் கடந்த ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் ஆசிரியர் பகவான் பள்ளியை விட்டு போகக்கூடாது எனக்கூறி கதறி அழுதனர்.
இதனால் ஆசிரியரும் மாணவர்களை கட்டிக்கொண்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் ஆசிரியர் பகவான்.

காதலித்து ஏமாற்றினார்
மாணவர்களின் மனதில் உறுதியான இடம் பிடித்த ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றியதாக ஆசிரியர் பகவான் மீது கவிதா என்ற பெண் திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காதலித்துவிட்டு மறுப்பு
வரும் 19ஆம் தேதி ஆசிரியர் பகவானுக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவிதா என்பவரை காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக ஆசிரியர் பகவான் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

6 மணி நேரம் விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில் நேற்று காலை ஆசிரியர் பகவானை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸ் நேற்று மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தியது. 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

முன்னேற்றம் இல்லை
அப்போது இருவீட்டாரிடமும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
| இதையடுத்து பேசி சமரச முடிவை எடுக்குமாறு இருதாரப்புக்கும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர் போலீசார். மக்களின் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் பகவான், பெண் புகார், திருமண மோசடி, போலீஸ் விசாரணை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
10 நாட்கள் அவகாசம்
இதையடுத்து பேசி சமரச முடிவை எடுக்குமாறு இருதரப்புக்கும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர் போலீசார். மக்களின் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் பகவான், பெண் புகார், திருமண மோசடி, போலீஸ் விசாரணை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு











Click it and Unblock the Notifications