Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூரில் மீண்டும் கொடூரம்.. வடமாநில இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒடிசாவை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருத்தணி ரயில் நிலையம் அருகே சுராஜ் என்பவரை 4 சிறுவர்கள் கத்தியால் வெட்டி ரீல்ஸ் எடுத்தனர்.

UP Native Attacked and Robbed in Thiruvallur Tamil Nadu Hospitalised in ICU

திருவள்ளூரில் மீண்டும் தாக்குதல்

இதேபோல் திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரி ஒருவர் வாலிபர்களால் தாக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர். இவர் திருவள்ளூர் அடுத்த மப்பேடு உசேன் நகர் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வரும் ரமாசங்கர், நேற்று காலை கொடூரமாக தாக்கப்பட்டார்.

முகம் முழுவதும் ரத்த காயம்

இதில் முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வடமாநில இளைஞர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபோதையில் தூங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கபட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலில் காயம் அடைந்த இளைஞர் கூறுகையில், "தனது சம்பளம் ரூ. 10 ஆயிரத்தை சிலர் தாக்கி பறித்ததாகவும் கூறியுள்ளார்.

இருவரை பிடித்து போலீசார் விசாரணை

இதையடுத்து, வட மநில இளைஞர் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் என இருதரப்பினருடமும் புகாரை பெற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வட மாநில இளைஞரை தாக்கியதாக லோகேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை மப்பேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+