திருவள்ளூரில் மீண்டும் கொடூரம்.. வடமாநில இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்! என்ன நடந்தது?
திருவள்ளூர்: திருவள்ளூரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒடிசாவை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருத்தணி ரயில் நிலையம் அருகே சுராஜ் என்பவரை 4 சிறுவர்கள் கத்தியால் வெட்டி ரீல்ஸ் எடுத்தனர்.

திருவள்ளூரில் மீண்டும் தாக்குதல்
இதேபோல் திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரி ஒருவர் வாலிபர்களால் தாக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர். இவர் திருவள்ளூர் அடுத்த மப்பேடு உசேன் நகர் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வரும் ரமாசங்கர், நேற்று காலை கொடூரமாக தாக்கப்பட்டார்.
முகம் முழுவதும் ரத்த காயம்
இதில் முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வடமாநில இளைஞர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபோதையில் தூங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கபட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலில் காயம் அடைந்த இளைஞர் கூறுகையில், "தனது சம்பளம் ரூ. 10 ஆயிரத்தை சிலர் தாக்கி பறித்ததாகவும் கூறியுள்ளார்.
இருவரை பிடித்து போலீசார் விசாரணை
இதையடுத்து, வட மநில இளைஞர் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் என இருதரப்பினருடமும் புகாரை பெற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வட மாநில இளைஞரை தாக்கியதாக லோகேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை மப்பேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications