திருவள்ளூரில் மீண்டும் கொடூரம்.. வடமாநில இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்! என்ன நடந்தது?
திருவள்ளூர்: திருவள்ளூரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒடிசாவை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருத்தணி ரயில் நிலையம் அருகே சுராஜ் என்பவரை 4 சிறுவர்கள் கத்தியால் வெட்டி ரீல்ஸ் எடுத்தனர்.

திருவள்ளூரில் மீண்டும் தாக்குதல்
இதேபோல் திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரி ஒருவர் வாலிபர்களால் தாக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர். இவர் திருவள்ளூர் அடுத்த மப்பேடு உசேன் நகர் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வரும் ரமாசங்கர், நேற்று காலை கொடூரமாக தாக்கப்பட்டார்.
முகம் முழுவதும் ரத்த காயம்
இதில் முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வடமாநில இளைஞர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபோதையில் தூங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கபட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலில் காயம் அடைந்த இளைஞர் கூறுகையில், "தனது சம்பளம் ரூ. 10 ஆயிரத்தை சிலர் தாக்கி பறித்ததாகவும் கூறியுள்ளார்.
இருவரை பிடித்து போலீசார் விசாரணை
இதையடுத்து, வட மநில இளைஞர் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் என இருதரப்பினருடமும் புகாரை பெற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வட மாநில இளைஞரை தாக்கியதாக லோகேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை மப்பேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications